தனித்தமிழ் வளர்ப்போம்


Thursday 22 September 2016

பி.எட்., படிப்பில் சரியும் மாணவர் சேர்க்கை!

கோவை மாவட்டத்தில், பி.எட்., பட்டம் பெற்று, 8,764 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அரசு பணிக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தால் தெரியவந்துள்ளது.

தொடரும் வேலைவாய்ப்பு தட்டுப்பாடு,டெட் தேர்வுகல்வி காலம் உயர்வு காரணங்களால் மாணவர்கள் சேர்க்கை நடப்பு கல்வியாண்டிலும் சரிந்துள்ளது.
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ்,தமிழகம் முழுவதும், 726 பி.எட்.கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும்ஒரு லட்சம் பேர் பி.எட்.,பட்டம் பெற்று வெளிவருகின்றனர். 2003ம் ஆண்டுகளுக்கு முன்தமிழகத்தில் பி.எட்.,கல்லுாரிகளின் எண்ணிக்கை குறைவு இதனால்பட்டம் பெற்றவர்களுக்குவேலைவாய்ப்பு எளிமையாக இருந்தது.
ஆனால், 2003ம் ஆண்டுக்குப் பின்தமிழகத்தில் தனியார் பி.எட்.கல்லூரிகள் தொடங்க தேசிய ஆசிரியர் கல்விக்கவுன்சில் அனுமதி அளித்தது. தொடர்ந்துபுற்றீசல் போல் பல்வேறு தனியார் பி.எட்.கல்லுாரிகள் துவங்கப்பட்டன. இதனால்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்பு பட்டியலும் நீண்டு வருகிறது.
இந்நிலையில்அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை சரிவால் உபரி ஆசிரியர்கள் அதிகரிப்பு,கட்டாய டெட் தகுதித் தேர்வுவேலைவாய்ப்பின்மைஇரண்டாண்டு கல்விக்காலம் உயர்வு போன்ற காரணங்களால்பி.எட்.கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக சரிந்தது.
நடப்பு கல்வியாண்டில், 60 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் பி.எட்.கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை இன்றி மூடுவிழாவை எதிர்நோக்கியுள்ளது.
கல்வியாளர் பிரபாகரன் கூறுகையில்நடப்பு கல்வியாண்டில்அரசு பி.எட்.கல்லுாரிகளில் மட்டுமே இடங்கள் பூர்த்தியாகியுள்ளது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லுாரிகளின் நிலை பரிதாபத்தில் உள்ளது. மாணவர்கள் சேர்க்கை இன்மையால் தனியார் கல்லுாரிகள் மூடுவிழாவை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்தஜூலை நிலவரப்படி கோவை மாவட்டத்தில் மட்டும், 8,764 பேர் பி.எட்.முடித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். தமிழகத்தில், 6 லட்சத்து 50 ஆயிரத்து 991 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர் என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறிந்துகொண்டேன். ஒவ்வொரு ஆண்டும் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறதுஎன்றார்.

Tuesday 20 September 2016

உனக்கு எதுக்கு நான் வணக்கம் சொல்லணும்?

ராஜா இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர்.


திடீரென்று கடுமையான  மழையும், காற்றும் அடித்தன. வானம் இருண்டு போனது . ராஜா காவலாளிகளை விட்டு வழி தவறிப் போய்விட்டார்.

எங்கும் காரிருள்,சற்று தொலைவில் ஒரு  சிறு குடிசை தெரிந்தது . அதிலிருந்து லேசான வெளிச்சமும் வந்து கொண்டிருந்தது. ராஜா வேகமாக அதனை நோக்கி நடந்தார்.

 அதற்குள்ளே கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைத் தவிர வேறு யாருமில்லை. ராஜா உள்ளே நுழைந்தும் அவன் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.
         
மாறு வேடத்தில் இருந்த போதிலும், அவன் மரியாதை தராமல் அமர்ந்திருந்ததில் ராஜாவுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது .
"ஏம்ப்பா! உன் வீட்டுக்கு வந்திருக்கேன் , நீ மரியாதையே இல்லாம, ஒரு வணக்கம் கூட சொல்லாம உக்காந்திருக்கியே?" என்றார்.

பதிலுக்கு அவன், "நீதான் என் வீட்டுக்குள்ள அடைக்கலமா நுழைஞ்சிருக்க. உனக்கு எதுக்கு நான் வணக்கம் சொல்லணும்?" என்றான்.
     
ராஜாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் எப்போதும் நகர்வலம் போகையில் ஒரு பொற்காசு மூட்டையைஉடன் வைத்திருப்பார்.

அதை அவனிடம் பிரித்துக் காட்டி விட்டு  "பார்த்தாயா? நான் எவ்வளவு பெரியவன் என்பதை?
இப்ப எனக்கு  வணக்கம் சொல்வாயா ?" என்றார்.

அவனும் பதிலுக்கு, "ஒரு ஏழை பக்கத்தில இருந்தும் ஒரு மூட்டை பொற்காசை நீயே வச்சிருக்கியே, உனக்கு எப்படி வணக்கம்
சொல்வது?" என்றான்.
     
ராஜா கோபமாய் ஒரு காசை அதிலிருந்து எடுத்து அவனிடம் வீசி, "இப்ப வணக்கம்  சொல்வாயா?" என்றார் .
       
காசைத் தொடாமல் அவன்  சொன்னான்,
"ஒரு மூட்டை காசை வச்சுக்கிட்டு அற்பமா ஒத்தக் காசை வீசுறியே, உனக்கா வணக்கம் சொல்வேன்?"
       
அரசர் இன்னும் உக்கிரமானார். பாதி மூட்டையை அவனருகே பிரித்துக் கொட்டி விட்டுக் கேட்டார், "எங்கிட்ட இருந்ததுல  சரி பாதியைக்  கொடுத்துட்டேன்.  இப்பவாவது வணக்கம் சொல்வியா?"

மெல்லிய புன்னகையுடன்  அவன் சொன்னான், "உங்கிட்ட இருக்குற அளவுக்கு இப்ப எங்கிட்டேயும்  இருக்கே! இப்ப நீயும் நானும் சமமாயிட்டோமே. சரி சமமா இருக்கிற உன்னை எதுக்கு நான் மதிக்கணும்? "

ராஜாவுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. மிச்சமிருந்த மூட்டையும் அவனிடத்தில் வீசி விட்டார், "இருந்த எல்லாத்தையுமே கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்" என்றார் .
     
அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்  ,
"இப்ப உங்கிட்ட ஒன்னுமே இல்லை. ஆனா எங்கிட்ட ஒரு மூட்டை தங்கம் இருக்கு.  இப்ப நீதான் எனக்கு வணக்கம் சொல்லணும்?" என்றான்.

ராஜா வாயடைத்துப் போனார் .

எத்தனைதான் அள்ளிக் கொடுத்தாலும் மனித இதயம் திருப்திப் படுவதில்லை . நிரந்தரமான மரியாதை என்பது பணத்தைக் கொண்டு வாங்கும் பொருளுமில்லை.  உண்மையான  அன்பைப் பிறருக்குக் கொடு. அதுவே பலமடங்காக உனக்குத் திரும்பக் கிடைக்கும்.