தனித்தமிழ் வளர்ப்போம்


Wednesday 31 December 2014

ஆசிரியர் போட்டி தேர்வு: புதிய விடைத்தாள் அறிமுகம்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு, ஜன., 10ல் நடக்க உள்ளது. இதை கண்காணிக்க, மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் உறுப்பினர் செயலராக, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் எஸ்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர். மையம் அமைப்பது, வினாத்தாள், விடைத்தாள்களை கொண்டு சேர்ப்பது, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்வர். இத்தேர்வில், முதன்முறையாக தேர்வர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுகிறது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்தாண்டுகளில், இத்தேர்வு விடைத்தாள்களில் தேர்வர்கள் தங்கள் பெயர், தேர்வு எண்ணை வட்டமிடுவர். அதில் சில இடங்களில் தவறு ஏற்பட்டது; சர்ச்சைக்கும் வழிவகுத்தது. இந்நிலையில், முறைகேடு களை தவிர்க்க, இம்முறை தேர்வர்களுக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுகிறது. அதில் அவர்களின் பெயர், தேர்வு எண் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Thursday 18 December 2014

உலக மாணவர்களுக்கான விண்வெளி அறிவுப் போட்டி

                NASA Space Settlement Contest 2015 என்று அழைக்கப்படும் வருடாந்திர போட்டி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாசா அமெஸ்(Ames) மற்றும் நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டி(NSS) ஆகியவை இணைந்து, இந்தப் போட்டியை நடத்துகின்றன.
இப்போட்டியில், உலகெங்கிலுமிருந்தும், 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில், தனியாகவோ, சிறு குழுவாகவோ(2 முதல் 5 பேர்) அல்லது பெரிய குழுவாகவோ(6 மற்றும் அதற்குமேல்) கலந்து கொள்ளலாம். ஆனால், இவை ஒவ்வொன்றின் செயல்பாடும், தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படும்.
அதேசமயம், வயது பாரபட்சமின்றி, செயல்பாட்டின் அடிப்படையில் மட்டுமே, சிறப்பான பரிசுகள் வழங்கப்படும்.
சமர்ப்பிக்க வேண்டியவை
இப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள், வான்வெளி துறை தொடர்பான டிசைன்கள், ஒரிஜினல் ஆராய்ச்சி, கட்டுரைகள், கதைகள், மாதிரிகள்(models), ஆர்ட்ஒர்க் அல்லது இதர ஏதேனும் orbital space settlement தொடர்பான உபகரணங்களை சமர்ப்பிக்கலாம்.
நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், entry படிவம் கிடைக்கிறது. உங்களது entry -ன், hardcopy மற்றும் நிரப்பப்பட்ட entry படிவத்தின் இரண்டு hardcopy -களை,
NASA Ames Research Center
Al Globus/Mail Stop 262-4
Bldg. 262, Rm. 277
Moffett Field, CA 94035-0001
USA
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
உங்களின் ஆய்வுகளை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 1, 2015.
சிறந்த ஆய்வுகளுக்கு, மேலான பரிசுகள் மற்றும் மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும். Hardcopy மூலமாக மட்டுமே ஆய்வுகளை சமர்ப்பிக்க வேண்டும். எலக்ட்ரானிக் முறையிலான சமர்ப்பித்தல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

ஒரு விநோதமான தேர்வு!



‘இதுவரை தேர்வில் ஆசிரியர்கள்தான் கேள்வி கேட்டார்கள். நீங்களே கேள்விகளை தேர்ந்தெடுக்கும் புதிய தேர்வு முறையை உங்கள் பள்ளியில் அறிமுகப்படுத்தப் போகிறேன்’.
ஒரு பள்ளி மாணவர்களிடம் இப்படி பேச்சை ஆரம்பித்ததும் கைதட்டலில் அரங்கமே அதிர்ந்தது.
‘ஆனால் சில நிபந்தனைகள். அபத்தமான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் கிடையாது. கேள்விகள் கடினமாக இருந்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். எளிதான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் குறையும். ஆக இந்த தேர்வில் கேள்விகளுக்கும் மதிப்பெண் உண்டு.’
கனத்த மவுனம் நிலவியது.
‘நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். தேர்ந்தெடுத்த கேள்விகளுக்கு தப்பான பதில் எழுதினால் மதிப்பெண்களே கிடையாது.’ 
சோகமான மவுனம்.
‘இப்போது சொல்லுங்கள். இந்த புதிய தேர்வுமுறை வேண்டுமா’
‘வேண்டவே வேண்டாம்’ என்று மாணவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.
‘சரி ஒரு சலுகை தருகிறேன். தேர்வுக்கு பாடப்புத்தகங்களை கொண்டு வந்து பார்த்து எழுதலாம். அடுத்தவர்களை பார்த்தும் எழுதலாம்.’
பாதி மாணவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். மீதி மாணவர்கள் முகம் கவலையில் தோய்ந்திருந்தது.
சற்று துணிச்சலான மாணவன் எழுந்தான்.
‘சார். டீச்சரே கேள்விகள தேர்ந்தெடுக்கட்டும் சார். நாங்க பழைய மாதிரியே பரீட்சை எழுதறோம் சார். நீங்க சொல்றது கொஞ்சம் பயமா இருக்கு.’
எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.
‘பரீட்சை எழுத எவ்வளவு நேரம் கொடுப்பீங்க சார்?’
‘வாழ்க்கை முழுசும் எழுதிக்கிட்டே இருக்கலாம். பதில் எழுத எழுத மார்க் வந்துக்கிட்டேயிருக்கும்.’
‘ஒண்ணுமே புரியலையே சார்.’ நீண்ட விளக்கம் ஒன்றை சொல்ல ஆரம்பித்தேன்.
வாழ்க்கை எனும் தேர்வு இந்த முறையில்தான் நடக்கிறது. அந்த தேர்வை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடமும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் கேள்வியை நாமே தேர்ந்தெடுக்கிறோம். உதாரணமாக இளம்வயதில் படிப்பதா இல்லை ஊர்சுற்றுவதா என்பதில் ஒன்றை தேர்ந்தெடுக்கிறோம். ஊர்சுற்றுவது என்பது எளிமையான கேள்வி. அதற்கு குறைவாகவே மதிப்பெண்கள் கிடைக்கும். படிப்பது என்பது கடினமான கேள்வி. அதில் நாம் படும் கஷ்டத்துக்கு ஏற்ப மதிப்பெண்கள் கிடைக்கும்.
என்ன படிப்பது என்பது அடுத்த கேள்வி. மருத்துவம். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்பது கஷ்டமான கேள்வி. அதற்கு அதிக மதிப்பும், மதிப்பெண்களும் உண்டு.
அதேபோல் என்ன வேலை என்பதும் நீங்களாக தேர்ந்தெடுக்கும் கேள்விதான். எனக்கு தெரிந்த ஒருவர் கல்லுõரியில் படிக்கும்போது ‘ஜாலியாக படிக்க வேண்டும் என தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலை படித்தார். ஒரு தினசரி பத்திரிகையில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். அதுவும் சுலபமான கேள்விதான். திடீரென்று அவருக்கு உத்வேகம் வந்து தமிழிலேயே ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார். இன்று ஒடிசா மாநிலத்தில் பெரிய பதவியில் இருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த கடினமான கேள்விக்கு வாழ்க்கை மதிப்பெண்களை வாரி வழங்கியது.
வாழ்க்கை நடத்தும் இந்த தேர்வில் புத்தகங்களை திறந்து வைத்துக் கொண்டே எழுதலாம். கூடப்பிறந்தவர்கள், நண்பர்கள் எப்படி கேள்விகளை தேர்ந்தெடுத்து, பதில் எழுதுகிறார்கள் என்பதையும் பார்த்து, உங்கள் கேள்விகளை தேர்ந்தெடுக்கலாம்.
சிலர் கடைசிவரை சுலபமான கேள்விகளையே தேர்ந்தெடுப்பார்கள். சாதாரண படிப்பு, சாதாரண வேலை என வாழ்ந்து முடித்துவிடுவார்கள்.
வெகுசிலர் கடினமான கேள்விகளை தேர்ந்தெடுத்து, அதிக மதிப்பெண்களை பெற்று பெரிய வாழ்க்கை வாழ்வார்கள்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் கேள்விகளுக்கும் மதிப்பெண்கள் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். எனக்கு மட்டும் ஏன் கேள்விகள் கடினமாக இருக்கின்றன என்றால் கேட்பவர்கள் சிரிப்பார்கள். ஏனென்றால் கேள்வியின் நாயகனே - கேள்வியின் நாயகியே - நீங்கள்தான்!
                                                                                                -   வரலொட்டி ரெங்கசாமி

பொதுத்தேர்வு நாட்களை நினைவூட்டும் முயற்சி; பெற்றோர் வரவேற்பு

           நாமக்கல்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுக்கு எத்தனை நாள் இருக்கிறது என்பதை, மாணவர்களுக்கு நினைவூட்டி, தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், பள்ளி நிர்வாகத்தினர் அறிவிப்பு பலகையில் எழுதி வருகின்றனர். இதை, பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, மார்ச் 5ம் தேதியும், அதை தொடர்ந்து மார்ச் 19ம் தேதி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் துவங்குகிறது. அதற்காக பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மாநில அளவில் சாதனை படைப்பதுடன், அனைவரும் வெற்றி பெற்று, 100 சதவீதம் தேர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக யூனிட் தேர்வு, திருப்புத்தேர்வு என பல கட்டமாக மாணவ, மாணவியரை தயார்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், தேர்வு துவங்க உள்ள நாட்களை மாணவர்களுக்கு நினைவூட்டி, தங்களை தயார்படுத்தும் வகையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தகவல் பலகை மூலம் எழுதப்பட்டு வருகிறது. இது எந்த பள்ளியிலும் இல்லாத வகையில், புதிய முயற்சியாக கடந்த 2012ம் ஆண்டு துவங்கியது.
தற்போது, மூன்றாம் ஆண்டாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, மாணவர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. தினமும் காலையில் பள்ளிக்கு வரும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், இந்த தகவல் பலகையை கடந்தே செல்வதால், தங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப்போகும் அரசு பொதுத்தேர்வு துவங்க உள்ள நாட்களை எண்ணி முழுமூச்சில் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

பொதுத்தேர்வு மையம் குறித்த வழக்கு; தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றம்

டிசம்பர் 18,2014,16:19 IST


 
     மதுரை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தனிநீதிபதி விசாரணைக்கு மாற்றி மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.
ம.தி.மு.க., மாநில மாணவரணி செயலாளர் ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. பல இடங்களில் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கின்றனர்.
வேறு பள்ளிகளில் அமைக்கப்படும் தேர்வு மையங்களுக்கு பிற பள்ளிகளிலிருந்து மாணவர்கள் 5 கி.மீ., தூரம் பயணம் செய்து தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் சிரமம் இன்றி நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். அதிக தூரம் பயணம் செய்வதால் மனநிலை பாதித்து விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன.
மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு மனுஅனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர் வக்கீல் பி.சுப்பாராஜ் ஆஜரானார். நீதிபதிகள், ’இதை பொதுநல மனுவாக கருத முடியாது. தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றப்படுகிறது,’ என்றார்.

5 ஆண்டுகளாக அங்கீகாரம் இல்லாத படிப்பு; மாணவ, மாணவியர் உண்ணாவிரதம்

டிசம்பர் 18,2014,12:53 IST



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக முதுநிலை மருத்துவ இயற்பியல் படிப்பிற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. பொறுமை இழந்த முதுநிலை மாணவ, மாணவியர், நேற்று மருத்துவமனை முன் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
புகார்:
காஞ்சிபுரம், காரப்பேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, 1981ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில், 2009ம் ஆண்டு மருத்துவ கல்வி இயக்ககம் மூலம் மூன்றாண்டு முதுநிலை மருத்துவ இயற்பியல் படிப்பு துவக்கப்பட்டது. இந்த படிப்புக்கு அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம், ஒரே ஆண்டு மட்டும் அங்கீகாரம் அளித்தது.
கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதி இல்லை என்று கூறி அடுத்த ஆண்டு அங்கீகாரம் அளிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த, 2009ம் கல்வியாண்டு மாணவர்கள் மட்டுமே அங்கீகாரத்துடன் பட்டப்படிப்பை முடித்து வெளியே சென்றுள்ளனர். எனினும், அங்கீகாரம் இல்லாமல் ஐந்து ஆண்டுகளாக மாணவர் சேர்க்கையை அண்ணா புற்றுநோய் மருத்துவமனை நிர்வாகம் நடத்தியுள்ளது.
இந்த படிப்பிற்கு எப்போது அங்கீகாரம் கிடைக்கும் என்ற தகவலை மருத்துவமனை நிர்வாகம் முறையாக தெரிவிப்பதில்லை என்று கூறி, மருத்துவ இயற்பியல் துறை மாணவர்கள், நேற்று மருத்துவமனை வாசலில் ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். அப்போது, மருத்துவ இயற்பியல் படிப்பிற்கான அங்கீகாரத்தை பெறவும், துறை தலைவரை கண்டித்தும், முழக்கங்களை எழுப்பினர்.
அங்கு வந்த மருத்துவமனை இயக்குனர் கிரிதரன், மாணவர்களுடன் பேச்சு நடத்தினார். அப்போது, துறை தலைவர் மீது அடுக்கடுக்காக புகார்களை மாணவர்கள் கூறினர். துறை தலைவரை இடமாற்றம் செய்வதாக அவர் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
போராட்டம்:
போராட்டம் குறித்து முதுநிலை மருத்துவ இயற்பியல் துறை மாணவர்கள் கூறியதாவது: கல்லூரியில் பயின்ற மாணவர்கள், தங்கள் படிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல், வேலைவாய்ப்பு இன்றி தங்கள் வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். தற்போது, 14 பேர் பயின்று வருகின்றனர்.
எங்கள் துறைக்கான அங்கீகாரத்தை அணுசக்தி கட்டுப்பாடு வாரியம், கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்காமல் இருந்து வருகிறது. மாணவர்கள் பயில வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறை, விடுதி போன்ற எந்த உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாததாலேயே, அங்கீகாரம் தருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் இருந்தும் வந்த எங்களுக்கு, அங்கீகாரம் பெற்ற படிப்பை, மத்திய - மாநில அரசுகள் உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த மாதம் கிடைக்குமாம்!
அண்ணா புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் கிரிதரன் கூறுகையில், ”போதுமான உட்கட்டமைப்பு இல்லாத காரணத்தாலேயே, கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது உண்மை தான். கடந்த நான்கு மாதங்களுக்கு முன், மருத்துவமனையில் அணுசக்தி கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அடுத்த மாதம் மருத்துவ இயற்பியல் துறைக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கும்,” என்றார்.

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சி; ஜி.எஸ்.எல்.வி., -எம். கே. 3 வெற்றி பயணம்


       பெங்களூரு : இந்தியாவின் அதிநவீன தொழில்நுட்ப திறன் வாய்ந்த ஜிஎஸ்எல்வி-மார்க் 3 ராக்கெட் இன்று காலை 9.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியின் முன்னோடியாக இந்த ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ராக்கெட் இது தான் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எடை கொண்டதாக இந்த ராக்கெட் அமைந்துள்ளது. இதன் எடை 629 டன்; உயரம் 42.4 மீட்டர். மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியின் முன்னோடியாக இந்த ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் 4 டன் எடையுள்ள விண்கலங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்டது. இந்த ராக்கெட் சோதனை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் மற்றொரு மைல்கல் என்றே கூறப்படுகிறது.

மாதிரி விண்கலம் வெற்றிகரமாக வங்க கடலில் விழுந்து சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் இந்த அரிய சாதனைக்கு பாடுபட்ட அனைவருக்கும் அவர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து கொண்டார். விண்வெளி ஆராயச்சியில் இந்த சோதனை மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.

ஒரு வருடமாக இருந்த பி.எட்., எம்.எட். படிப்புகள் 2வருடங்களாக உயர்வு தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களும் தயார்

பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் காலம் ஒரு வருடமாக இருந்தது. அதுவருகிற கல்வி ஆண்டு முதல் 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ள பி.எட். மற்றும் எம்.எட். படிப்புக்கு பாடத்திட்டம் தயார் நிலையில் உள்ளது.


பி.எட்., எம்.எட். படிப்பின் காலம் 2 வருடமாக உயர்வு

நாட்டின் வருங்காலம் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்வது உண்டு. அந்த அளவுக்கு மாணவர்களை வல்லவர்களாக, நல்லவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள். அதனால் தான் ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி என்றும் கூறுவது உண்டு.கல்வியில் உலக நாடுகளோடு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று இந்தியஅரசு விரும்புகிறது. தமிழக அரசும் கல்விக்காக எந்த செலவையும் ஏற்கத்தயார் என்ற நிலையில் உள்ளது.இதுவரை ஆசிரியர் ஆகும் முன்பாக, பட்டப்படிப்பு படித்த மாணவ-மாணவிகள் ஆசிரியர் பயிற்சி பெறுவார்கள். பெற்றுக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் பி.எட். படிப்பு மற்றும் எம்.எட். படிப்பு காலம் தலா ஒரு வருடம் தான்.ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். அதற்காக பயிற்சி காலத்தை 2 வருடமாக்கவேண்டும் என்று தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) முடிவு செய்து அறிவித்துள்ளது.இதையொட்டி நாடு முழுவதும் பி.எட். மற்றும் எம்.எட். படிப்பு 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

வருகிற கல்வி ஆண்டில் ...

மாணவர்களின் கல்வித்திறனை மேலும் அதிகரிப்பதற்காக ஆசிரியர்களின் பயிற்சி காலத்தை 2 வருடமாக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது.இதை வருகிற கல்வி ஆண்டில் (2015-2016) அமல்படுத்துகிறோம்.மேலும் தமிழக அரசின் அனுமதி பெறுவதற்காக ஏற்கனவே பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு சிண்டிகேட் அனுமதி மற்றும் தமிழக அரசின் அனுமதிக்கு வைக்கப்பட உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும் இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.இவ்வாறு பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

ஆசிரியர் எண்ணிக்கை அதிகரிப்பு

மேலும் இந்த பி.எட். படிப்புக்கும், எம்.எட். படிப்புக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து : தண்டனை பெற்ற பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட 8 பேருக்கு ஜாமீன் மறுப்பு

           கும்பகோணம் அரசு உதவிபெறும் பள்ளியில் 94 குழந்தைகள் பலியான தீவிபத்தில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட 8 பேருக்கும் ஜாமீன் மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப்பள்ளியும், சரஸ்வதி வித்யாலயா கிருஷ்ணா அரசு உதவிபெறும் பள்ளியும் செயல்பட்டு வந்தன.இதில், சரஸ்வதி விதியாலாயா கிருஷ்ணா அரசு உதவிபெறும் பள்ளியில் 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். மேலும் 18 குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். கும்பகோணம் கிழக்கு போலீஸார், பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட 24 பேர் மீது வழக்கப்பதிவு செய்தனர். இவர்கள் மீதான வழக்கு தஞ்சை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இவ்வழக்கில், 2015 ஜூலை 30-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றம் சுமத்தப்பட்டிருந்த மாவட்ட தொடக்கக்ல்வி அலுவலர் பழனிச்சாமி, மாவட்ட கல்வி அலுவலர் நாராயணசாமி, உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 11 பேரை விடுதலை செய்தும், பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, அவரது மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாத்தலட்சுமி உள்ளிட்ட 8 பேருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பொறியாளர் ஜெயச்சந்திரன் மட்டும் அன்றைய தினமே, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மற்ற 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி நிறுவனர் உள்ளிட்ட 9 பேரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 பேருக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை நீதிபதிகள் செல்வம், வாசுகி அடங்கிய பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த 9 பேருக்குமான தண்டனையை நிறுத்தி வைக்க கூடாது, 8 பேருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும், கீழ்கோர்ட்டில் 11 பேருக்கு வழங்கப்பட்ட விடுதலையை எதிர்த்தும் அரசு தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து, 9 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், 8 பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுத்தனர். மேலும் இமமனு மீதான இறுதி விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சி.பி.எஸ்.இ மோகம் !

         சி.பி.எஸ்.இ மோகம், ஒரு பேயைப்போல் பெற்றோர்களை ஆட்டுவித்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் இருந்து, தனியார் மெட்ரிக் பள்ளிகளில் வெறிகொண்டு சேர்த்தார்கள்.
இப்போது அங்கிருந்து சி.பி.எஸ்.இ பக்கம் கூட்டம், கூட்டமாகத் தாவுகின்றனர். மிக மூர்க்கமானதாக மாறியிருக்கும் இன்றைய பந்தய வாழ்வில், ஓடி ஜெயிக்க சி.பி.எஸ்.இ-தான் உதவும் என்பது பெற்றோர்களின் கணக்கு. சமச்சீர் கல்வியின் வருகைக்குப் பிறகு, இது இன்னும் கண்மூடித்தனமாக அதிகரித்துள்ளது.
முன்பு அரசுப் பள்ளிக்கும், தனியார் மெட்ரிக் பள்ளிகள், ஓரியன்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கும் வெவ்வேறு பாடத் திட்டங்கள் இருந்தன. 2011-ல் அமல்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி, மேற்கண்ட அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே வகை பாடத் திட்டத்தைக் கொண்டுவந்தது. அதாவது தனியார் பள்ளியில் பணம் வாங்கிக்கொண்டு நடத்தப்படும் அதே பாடம், அரசுப் பள்ளியில் இலவசமாக நடத்தப்படுகிறது. ஒரே தரமுள்ள பொருளை ஒருவர் அதிக விலை வைத்தும் இன்னொருவர் இலவசமாகவும் விற்றால், நீங்கள் யாரிடம் வாங்குவீர்கள்? இலவசப் பொருளை வாங்குவதுதான் பொதுவாக நடக்கும். ஆனால், சமச்சீர் கல்வி விஷயத்தில் இது தலைகீழ். எல்லோரும் மெட்ரிக் பள்ளியைவிட அதிக செலவு பிடிக்கக்கூடிய சி.பி.எஸ்.சி-யின் பக்கம் ஓடினார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது? அரசுப் பள்ளிகளின் மீது உள்ள ஒவ்வாமையினால் இது வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மக்களிடம் சி.பி.எஸ்.இ மோகம் தொடங்கிவிட்டதும் ஒரு காரணம்.
இந்தச் சூழலைத் துல்லியமாகக் கணித்த தனியார் மெட்ரிக் பள்ளிகள், இதற்கு மேலும் மெட்ரிக் பள்ளிகளாகவே நீடித்தால் மதிப்பிழந்து போவோம் என்பதைப் புரிந்துகொண்டன. ஆகவே, சமச்சீர் கல்வி வரம்புக்குள் வராத சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாறத் தொடங்கின. சமச்சீர் கல்வி அமலாக்கப்பட்டதில் இருந்து இதுவரை, தமிழ்நாட்டில் 1,200-க்கும் அதிகமான மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ முறைக்கு மாறுவதற்கு தடையில்லா சான்று கேட்டு மாநில அரசிடம் விண்ணப்பித்துள்ளன. அதில் 40 சதவிகிதப் பள்ளிகளுக்கு மாநில அரசு சான்று வழங்கப்பட்டுவிட்டது. அவர்கள் இப்போது மத்திய கல்வி வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளனர்.
மெட்ரிக் பள்ளியாக இருந்தால், மாநில அரசின் கட்டண நிர்ணய கமிட்டியின் வரம்புக்குள் வந்துவிடும். பெரும்பாலான பள்ளிகள் அந்தக் கட்டணத்தைப் பின்பற்றுவது இல்லை என்றபோதிலும், சி.பி.எஸ்.இ பள்ளிகள் என்றால், வரம்புக்குக் கட்டுப்படுவதுபோல போலியாக நடிக்கவேண்டிய சுமைகூட கிடையாது. மத்திய கல்வி வாரியக் கட்டுப்பாடுகளை மட்டும் மதித்தால் போதும். இதனால் 'அதிகக் கட்டணம் கேட்கிறார்கள்’ என்று யாராவது கொடி பிடித்து முழக்கம் எழுப்புவதும் முடியாது. கல்வி உரிமை சட்டத்தின்படி, ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடங்கள் ஒதுக்க வேண்டும். இது சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றாலும், அதைக் கண்காணிக்க முறையான ஓர் அமைப்பு இல்லை. இப்படி பல சௌகரியங்கள் இருப்பதால், சி.பி.எஸ்.இ பக்கம் சாய்கிறார்கள். சமீபத்தில் புதுச்சேரி அரசுகூட, அங்குள்ள அரசுப் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ முறையை அமல்படுத்தப்போவதாகக் கூறியிருக்கிறது.
உண்மையில் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் அனுமதி மற்றும் கண்காணிப்பில் கடும் குழப்பங்கள் நிலவுகின்றன. 6-ம் வகுப்பில் இருந்துதான் சி.பி.எஸ்.இ கல்விமுறைக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அங்கீகாரம் வழங்கும்போது அந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு நடத்தப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில், எந்த முறையில் அந்தப் பள்ளி நடைபெற வேண்டும் என்பதற்கு சி.பி.எஸ்.இ-ல் முறையான வரையறை இல்லை. இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் தனியார் பள்ளிகள், முதல் வகுப்பில் இருந்தே சி.பி.எஸ்.இ அங்கீகாரம் பெற்று பள்ளி நடத்துவதைப் போன்ற போலி தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. சி.பி.எஸ்.இ பள்ளிகளைக் கண்காணித்து, கட்டுப்படுத்த ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் ஒரே ஓர் அலுவலகம்தான் செயல்படுகிறது என்பதால், இந்தப் பிரச்னைகள் தொடர்ந்து நீடிக்கின்றன.
இந்த மோகம் ஒரு பக்கம் இருக்க... ஐ.ஜி.சி.எஸ்.இ (IGCSE - International General Certificate of Secondary Education), ஐ.பி (IB - International Baccalaureate) போன்ற சர்வதேசக் கல்விமுறையைப் பின்பற்றும் பள்ளிகளும் நம் ஊரில் அதிகரித்து வருகின்றன. ஐ.ஜி.சி.எஸ்.இ என்பது, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கல்விமுறை. ஐ.பி - சுவிட்சர்லாந்து நாட்டின் கல்விமுறை. இதில் ஐ.ஜி.சி.எஸ்.இ முறை சற்று பிரபலம். இந்த முறைப்படி தமிழ்நாட்டில் 40-க்கும் அதிகமான பள்ளிகள் செயல்படுகின்றன. பிரமாண்டமான வளாகங்கள், மலைக்கவைக்கும் கட்டணம் என்று மற்ற தனியார் பள்ளிகளுக்கு எந்த வகையிலும் சளைக்காத இந்தப் பள்ளிகளின் பாடத் திட்டம்தான் அச்சுறுத்துகிறது.
பொதுவாக ஸ்டேட் போர்டு அல்லது சி.பி.எஸ்.இ கல்வி முறையில், வரலாறு என்றால் இந்திய வரலாறு. அதை முதன்மையாகக்கொண்டுதான் மற்ற உலக வரலாறு விரியும். ஆனால், இந்தப் பள்ளிகளில் வரலாறு என்றால், அது ஐரோப்பாவின் வரலாறு. அதுதான் முதன்மை இடம் வகிக்கும். இங்கிலாந்தின் கோணத்தில் இருந்து இந்தியாவைப் பற்றியும் சில பகுதிகள் சொல்லப்பட்டிருக்கும். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ரத்தம் தோய்ந்த வரலாறு கிடையாது. பகத் சிங்கும், திப்புசுல்தானும், கட்டபொம்மனும் யார் என்றே தெரியாது. இந்தப் பள்ளிகளில் புவியியல் என்றால், அது ஐரோப்பாவின் புவியியல்தான். அங்குள்ள நிலவளம், சுற்றுச்சூழல் பற்றிதான் படிக்கிறார்கள்; இந்தியாவைப் பற்றி அல்ல. இந்தப் பள்ளியில் படித்துவிட்டு மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கோ, இங்கிலாந்துக்கோ செல்ல வேண்டியிருந்தால் IELTS (International English Language Testing System), TOEFL (Test of English as a Foreign Language) நுழைவுத்தேர்வுகள் எழுதத் தேவை இல்லையாம். இதை ஒரு சிறப்புத் தகுதியாகச் சொல்கின்றனர். பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டுள்ள பெற்றோர்களுக்கு, இந்தத் தொலைநோக்குத் திட்டம் பிடித்திருப்பதில் வியப்பு இல்லை.
வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளின் குழந்தைகள் படிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட இத்தகைய சர்வதேசப் பள்ளிகள் படிப்படியாகக் கீழே இறங்கி பணக்காரர்களுக்கானதாக மாறின. இப்போது இவை கல்வி வர்த்தகத்தின் அங்கமாகிவிட்டன!
சைட் வாங்கினால் ஸீட் ஃப்ரீ!
வேலூரில் உள்ள மெட்ரிக் பள்ளி ஒன்றின் விளம்பரம், நகைக்கடை, ரியல் எஸ்டேட் விளம்பரம் போலவே இருக்கிறது. ஒரு மாணவனைத் தேர்வுகளில் சென்டம் எடுக்கவைக்கும் ஆசிரியருக்கு இரண்டு கிராம் தங்கம் தருகிறார்களாம். அப்படி நிறையப் பேரை சென்டம் எடுக்கவைத்த ஓர் ஆசிரியருக்கு, கார் வாங்கித் தந்திருக்கிறார்களாம். இவற்றை விளம்பரப்படுத்தி பிள்ளைகளை தங்கள் பள்ளியில் சேர்க்கச் சொல்லி அழைக்கின்றனர். இவர்களிடம் படித்தால், நம் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்?
கிழக்கு தாம்பரத்தில் இயங்கும் சி.பி.எஸ்.சி பள்ளி ஒன்று, ரியல் எஸ்டேட் வியாபாரமும் செய்கிறது. ஆலப்பாக்கத்தில் இவர்களுக்கு ஒரு லே-அவுட் இருக்கிறது. பள்ளியில் அட்மிஷன் கேட்டு வரும் பெற்றோர்களுக்கு 'அங்கு இடம் வாங்கினால், இங்கு ஸீட் ஃபிரீ’ என்று 'காம்போ ஆஃபர்’ தருகின்றனர். பெற்றோர்களுக்கு இந்த டீலிங் பிடித்துவிடுவதால், உடனே வேலை முடிந்துவிடுகிறது. இப்படி மாநிலம் முழுக்க கற்பனைக்கும் எட்டாத வடிவங்களில் கல்விக் கொள்ளைகள் நடக்கின்றன!
தங்கமே தங்கம்!
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதைப் போல, பெற்றோர்களின் மோகத்தைப் பலரும் பயன்படுத்திக்கொள்கின்றனர். அதில் குறிப்பிடத்தகுந்தவர்கள் அடகுக்கடைக்காரர்கள். புகழ்பெற்ற நகை அடகு நிறுவனங்கள், 'கல்விக் கடன் மேளா’ நடத்துகின்றன. 'உங்கள் குழந்தைக்குக் கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லையா? கவலையைவிடுங்கள். உங்களிடம் உள்ள தங்க நகைகளை எடுத்து வாருங்கள். நாங்கள் கடன் தருகிறோம்’ என்று அழைக்கிறார்கள். ஏதோ நம் பிள்ளைகளைப் படிக்கவைப்பதற்காகவே வந்தவர்கள்போல பாசாங்கு செய்யும் இவர்கள், எரியும் வீட்டில் பிடுங்கிய வரையில் லாபம் பார்க்கின்றனர். மதுரையில் உள்ள சில தனியார் பள்ளிகளின் வாசல்களில், இந்த அடகுக்கடையின் ஊழியர்கள் துண்டு நோட்டீஸ் விநியோகிக்கின்றனர். தனியார் கல்வி மோகத்தால் லாபம் பார்ப்பது கல்வி நிறுவனங்கள் மட்டும் அல்ல.

Tuesday 9 December 2014

ஐஞ்சிறுகாப்பியங்கள்

ஐஞ்சிறுகாப்பியங்கள்

  • ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள்
  • ஐஞ்சிறுகாப்பியங்கள் இலக்கணம் கூறும் நூல் = தண்டியலங்காரம்
  • ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை
  • நாக குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • உதயன குமார காவியம்   = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • யசோதர காவியம்   = வெண்ணாவலூர் உடையார் வேள்
  • நீலகேசி  = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • சூளாமணி   = தோலாமொழித்தேவர்

ஐஞ்சிறுகாப்பியங்கள் அட்டவணை:

நூல்சமயம்பாவகைஆசிரியர்அமைப்பு
நாக குமார காவியம்சமணம்விருத்தம்
5 சருக்கம், 170 பாடல்
உதயன குமார காவியம்சமணம்விருத்தம்
6 காண்டம், 369 பாடல்
யசோதர காவியம்சமணம்விருத்தம்வெண்ணாவலூர் உடையார் வேள்5 சருக்கம், 320 பாடல்
நீலகேசி       சமணம்விருத்தம்
10 சருக்கம், 894 பாடல்
சூளாமணிசமணம்விருத்தம்தோலாமொழித்தேவர்12 சருக்கம்,  2330 விருதப்பாக்கள்

நாககுமார காவியம்

நாககுமாரகாவியத்தின் உருவம்:

  • ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
  • காலம் = கி.பி.16ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 170
  • சருக்கம் = 5
  • பாவகை = விருத்தப்பா
  • சமயம் = சமணம்

பெயர்க்காரணம்:

  • கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது.

வேறு பெயர்:

  • நாகபஞ்சமி கதை

பொதுவான குறிப்புகள்:

  • நாகபஞ்சமி நோன்பின் சிறப்பைக் கூறும் நூல்.
  • மனதையும் போகத்தையும் மிகுதியாக கூறும் சமண நூல்.
  • 519 பெண்களை மணக்கிறான் தலைவன்
  • இந்நூலை “சொத்தை நூல்” என்கிறார் மது.ச.விமலானந்தம்

மேற்கோள்:

  • அரனின்றிப் பின்னை ஒன்றுமுயிர்க்கு அரணில்லை என்றும் 
    மறமின்றி உயிர்க்கு இடர்செய் மற்றொன்றும் இல்லைஎன்றும் 
    திறமிகு உணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக்கு அஞ்சி 
    மறம் இதை விட்டு அறத்தில் வாழுமின் உலகத்தாரே

உதயணகுமார காவியம்

உதயனகுமார காவியத்தின் உருவம்:

  • ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
  • காலம் = கி.பி.15ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 369
  • காண்டம்    = 6

காண்டங்கள்:

  • உஞ்சைக் காண்டம்
  • இலாவண காண்டம்
  • மகத காண்டம்
  • வத்தவ காண்டம்
  • நரவாகன காண்டம்
  • துறவுக் காண்டம்

வேறு பெயர்:

  • உதயணன் கதை

பொதுவான குறிப்பு:

  • இந்நூலின் மூலநூல் = பெருங்கதை
  • கதைத்தலைவன் = உதயணன்
  • உதயணனை “விச்சை வீரன்” என்றும் கூறுவர்.
  • உதயணன் யாழின் பெயர் = கோடபதி
  • “பெயர் தான் காவியம், ஆனால் காவியம் என்பது இம்மியும் இல்லை” என்பார்  மது.ச.விமலானந்தம்

மேற்கோள்:

  • வீணை நற்கிழத்தி நீ, வித்தக உருவி நீ 
    நாணின் பாவை தானும் நீ, நலன்திகழ்மணியும் நீ 
    காண என்றன் முன்பாய்க் காரிகையே வந்து, நீ 
    தோணி முகம் கட்டு எனச் சொல்லியே புலம்புவான்

யசோதர காவியம்

யசோதர காவியத்தின் உருவம்:

  • ஆசிரியர் = வெண்ணாவலூர் உடையார் வேள்
  • காலம்   = 13ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள்      = 320
  • சருக்கங்கள்    = 5
  • பாவகை   = விருத்தம்
  • சமயம் = சமணம்

பொதுவான குறிப்புகள்:

  • வடமொழியில் எழுதப்பட்ட உத்திர புராணத்தில் இருந்து இதன் கதை எடுக்கப்பட்டது என்றும், புட்பதத்தார் எழுதிய யசோதர சரிதத்தின் தழுவல் என்றும் கூறுவர்.
  • “மாளவ பஞ்சம்” என்னும் கருநாடக இசை பற்றி கூறப்பட்டுள்ளது.

மேற்கோள்:

  • யான் உயிர் வாழ்தல் எண்ணி எளியவர்
  • தம்மைக் கொல்லின் வான்உயிர் இன்பமே 
    அல்லால் வருநெறி திரியும் அன்றி 
    ஊன்உயிர் இன்பம் எண்ணி எண்ணாமல் 
    மற்றொன்றும் இன்றி மானுடர்வாழ்வு மண்ணில் 
    மரித்திடும் இயல்பித்ரு அன்றோ

நீலகேசி

நீலகேசியின் உருவம்:

  • ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
  • காலம்     = 6ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள்      = 894
  • சருக்கம்    = 10
  • பாவகை      = விருத்தம்
  • சமயம்   = சமணம்

வேறு பெயர்:

  • நீலகேசி தெருட்டு
  • நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை)

பெயர் காரணம்:

  • நீலம் = கருமை, கேசம் = கூந்தல்
  • கேசி = கூந்தலை உடையவள்
  • நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்

பொதுவான குறிப்புகள்:

  • நீலகேசி என்றால் கருத கூந்தலை உடையவள் என்று பொருள்
  • இந்நூல் குண்டலகேசி என்னும் நூலிற்கு எதிராக எழுதப்பட்டது.
  • நூலுக்கு உரை எழுதியவர் = திவாகர வாமன முனிவர்.
  • இவரின் உரை “சமய திவாகரம்” எனப்படுகிறது.

மேற்கோள்:

  • கோறல் பொய்த்தல் கொடுங்களவு 
    நீங்கிப் பிறர் மனைகண்மேல் 
    சேரல் இன்றிச் செலும் பொருள்மேல் 
    சென்ற சிந்தை வேட்கையினை 
    ஆறு கிற்பின் அமர் உலகம் 
    நுன்கண் கடியதாம் என்றாள்

சூளாமணி

சூளாமணியின் உருவம்:

  • ஆசிரியர் = தோலாமொழித் தேவர்
  • காலம்   = கி.பி.பத்தாம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 2330
  • சருக்கம்   = 12
  • பாவகை   = விருத்தம்
  • சமயம் = சமணம்

பெயர்க்காரணம்:

  • மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளாமணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.

பொதுவான குறிப்புகள்:

  • நூல் ஆசிரியர் தோலாமொழித் தேவரின் இயற் பெயர் வர்த்தமான தேவர்.
  • இந்நூலின் முதல் நூல் = வடமொழியில் உள்ள ஆருகத மாபுராணம்
  • சூளாமணியின் கதை நாயகன் திவிட்டன்
  • நூலை முதலில் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம்பிள்ளை
  • “விருதப்பாவை கையாள்வதில் இவர் சீவக சிந்தாமணி ஆசிரியரையும் மிஞ்சிவிட்டார்” என்கிறார் மு.வரதராசனார்
  • “சிந்தாமணியை விடச் செப்பமான நடையை உடையது சூளாமணி” என்று கி.வா.ஜகன்னாதன் கூறுகிறார்.
  • “சிந்தாமணியிலும் கூட இத்தகைய ஓடமும் இனிமையும் இல்லை” என்கிறார் தெ.பொ.மீ

மேற்கோள்:

  • ஆணை துரப்ப அரவு உரை ஆழ்குழி 
    நானவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர் 
    தேனின் அழிதுளி நக்கும் திறத்தது 
    மானுடர் இன்பம் மதித்தனை கோல் நீ

காப்பியங்கள்:

காப்பியங்கள்:

  • “பொருட் தொடர்நிலைச் செய்யுள்”, காப்பியம் எனப்படும்.
  • காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் = தண்டியலங்காரம்
  • காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும்.

ஐம்பெரும்காப்பியங்கள்:

  • ஐம்பெரும்காப்பியங்கள் என்ற  முதன் முதலில் கூறியவர் = மயிலைநாதர்
  • ஐம்பெரும்காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் = கந்தப்பதேசிகர்(திருத்தணிகைஉலா)
  • சிலப்பதிகாரம்         = இளங்கோவடிகள்
  • மணிமேகலை         = சீத்தலைச் சாத்தனார்
  • சீவக சிந்தாமணி       = திருத்தக்கதேவர்
  • வளையாபதி          = பெயர் தெரியவில்லை
  • குண்டலகேசி          = நாதகுத்தனார்
  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் எனப்படும்.
  • சமணக் காப்பியங்கள்   = சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி
  • புத்தக் காப்பியங்கள்    = மணிமேகலை, குண்டலகேசி

சுத்தானந்த பாரதி:

  • கவியோகி சுத்தானந்தபாரதி ஐம்பெரும்காப்பியங்களையும் அணிகலன்களாக உருவகிக்கிறார்.
காதொளிரும் குண்டலமும் கைக்குவளையாபதியும்
கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும்
மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்போது
ஒளிரும் திருவடியும்

ஐம்பெரும்காப்பியங்கள் அட்டவணை:

நூல்சமயம்பாவகைஆசிரியர்நூல் அமைப்பு
சிலப்பதிகாரம்சமணம்நிலைமண்டில ஆசிரியப்பா + கொச்சக கலிப்பாஇளங்கோவடிகள்3 காண்டம், 30 காதை, 5001அடிகள்
மணிமேகலைபௌத்தம்நிலைமண்டில ஆசிரியப்பாசீத்தலைச் சாத்தனார்30 காதை, 4755 வரிகள்
சீவகசிந்தாமணிசமணம்விருத்தம்திருத்தக்கதேவர்13 இலம்பகம்,  3145 பாடல்கள்
வளையாபதிசமணம்விருத்தம்
72 பாக்கள் கிடைத்துள்ளன
குண்டலகேசிபௌத்தம்விருத்தம்நாதகுத்தனார்224 பாடல்கள் கிடைத்துள்ளன

ஐம்பெருங்காப்பியங்களின் வேறுபெயர்கள்:

நூல்வேறுபெயர்கள்
சிலப்பதிகாரம்
  • தமிழின் முதல் காப்பியம்
  • உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
  • முத்தமிழ்க்காப்பியம்
  • முதன்மைக் காப்பியம்
  • பத்தினிக் காப்பியம்
  • நாடகப் காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
  • புதுமைக் காப்பியம்
  • பொதுமைக் காப்பியம்
  • ஒற்றுமைக் காப்பியம்
  • ஒருமைப்பாட்டுக் காப்பியம்
  • தமிழ்த் தேசியக் காப்பியம்
  • மூவேந்தர் காப்பியம்
  • வரலாற்றுக் காப்பியம்
  • போராட்ட காப்பியம்
  • புரட்சிக்காப்பியம்
  • சிறப்பதிகாரம்(உ.வே.சா)
  • பைந்தமிழ் காப்பியம்
மணிமேகலை
  • மணிமேகலைத் துறவு
  • முதல் சமயக் காப்பியம்
  • அறக்காப்பியம்
  • சீர்திருத்தக்காப்பியம்
  • குறிக்கோள் காப்பியம்
  • புரட்சிக்காப்பியம்
  • சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
  • கதை களஞ்சியக் காப்பியம்
  • பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
  • பசு போற்றும் காப்பியம்
சீவக சிந்தாமணி
  • மணநூல்
  • முக்திநூல்
  • காமநூல்
  • மறைநூல்
  • முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்)
  • இயற்கை தவம்
வளையாபதி

குண்டலகேசி
  • குண்டலகேசி விருத்தம்
  • அகல கவி

கம்பராமாயணம்


ஆசிரியர் குறிப்பு:

    பெயர் = கம்பர்
    ஊர் = சோழநாட்டு திருவழுந்தூர்
    தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன்
    மகன் = அம்பிகாபதி
    மகள் = காவிரி

ஆசிரியரின் சிறப்பு பெயர்:

    கவிச்சக்ரவர்த்தி
    கவிப்பேரரசர்
    கவிக்கோமான்
    கம்பநாடுடைய வள்ளல்

இவரின் படைப்புகள்:

    ஏர் எழுபது
    சிலை எழுபது
    திருக்கை வழக்கம்
    சரஸ்வதி அந்தாதி
    சடகோபர் அந்தாதி(நம்மாழ்வார் பற்றியது)

கம்பராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்:

    கம்பசித்திரம்
    கம்பநாடகம்
    தோமறுமாக்கதை
    இயற்கை பரிணாமம்

நூல் அமைப்பு:

    காண்டம் = 6
    படலம் = 113
    மொத்த பாடல்கள் = 10569
    முதல் படலம் = ஆற்றுப்படலம்
    இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம்

காண்டங்கள்:

    பால காண்டம்
    அயோத்தியாகாண்டம்
    ஆரண்யகாண்டம்
    கிட்கிந்தா காண்டம்
    சுந்தர காண்டம்
    யுத்தகாண்டம்
    ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய “உத்தர காண்டம்”

சிறப்பு:

    மு.இராகவையங்கார் = “வடமொழி தென்மொழிக் காப்பிய நயங்களாகிய பொன் மையில் தம் சித்திரக்கோலைத் தோய்த்துத் தம் கப்பிய ஓவியத்தைக் கம்பநாடார் வரைந்தார்".
    வ.வே.சு.ஐயர் = “கம்பயராமாயணம் தனக்கு முதல் நூலான வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும்”
    எஸ்.மகாராஜன் = “உலகத்திலேயே வேறொரு நாட்டில், இவ்வளவு பழமையான கவிஞன் இருபதாம் நூற்றாண்டு மக்களுடைய மனதை இப்படி ஆட்கொண்டதில்லை”
    பாரதியார் = “கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்கிறார்.
    பாரதியார் = “கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என்கிறார்.
    கவிமணி = “வீசும் தென்றல் காற்றுண்டு – கையில் கம்பன் கவியுண்டு” என்கிறார்.
    “கல்வியிற் பெரியவர் கம்பர்”
    “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்”
    “கம்ப நாடன் கவிதையிற்போல் கற்றோருக்கு இதயம் களியாதே”
    “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்”
    தமிழுக்கு கதி = கம்பர், திருவள்ளுவர்
    96 வகை ஓசை வகைகளை கம்பர் கையாண்டுள்ளார்.

பொதுவான குறிப்புகள்:

    கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் = இராமாவதாரம்
    கம்பர் இறந்த இடம் = நாட்டரசன் கோட்டை
    கம்பரின் சமாதி உள்ள இடம் = நாட்டரசன் கோட்டை
    வான்மீகி எழுதாத “இரணியன் வதைப் படலம்” கம்பராமாயணத்தின் மிக சிறந்த பகுதியாக கருதப்படுகிறது.
    கமபராமாயணம் ஒரு வழி நூல்
    கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை 1000 பாடல்களுக்கு ஒருமுறை பாடியுள்ளார்.
    கம்பார் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் = திருவரங்கம்
    கம்பருக்கு தமிழக அரசு திருவழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து சிறப்பித்துள்ளது.
    இவர் மூன்றாம் குலோத்துங்கனின் அவை களப் புலவர் ஆவார்.
    இவரின் மகன் அம்பிகாபதி சோழன் மகளை காதலித்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் அம்பிகாபதி, அமராவதி இருவரின் உயிர் நீங்க, இவர் சோழ நாட்டை விட்டு வெளியேறினார்.
    15 நாட்களில் கம்பராமாயாணம் முழுவதும் எழுதி முடித்தார்(10569 பாடல்கள்)

மேற்கோள்:

    தாதகு சோலை தோறும் செண்பகக் காடு தோறும்
    எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தாலே
    இல்லாரும் இல்லை உடையாரும்
    இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்
    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால்
    இன்று போய் நாளை வா
    வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
    வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
    உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்
    கை வண்ணம் அங்குக் கண்டேன்
    கால் வண்ணம் இங்குக் கண்டேன்
    அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா
கம்பராமாயணம்
ஆசிரியர் குறிப்பு:

    பெயர் = கம்பர்
    ஊர் = சோழநாட்டு திருவழுந்தூர்
    தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன்
    மகன் = அம்பிகாபதி
    மகள் = காவிரி

ஆசிரியரின் சிறப்பு பெயர்:

    கவிச்சக்ரவர்த்தி
    கவிப்பேரரசர்
    கவிக்கோமான்
    கம்பநாடுடைய வள்ளல்

இவரின் படைப்புகள்:

    ஏர் எழுபது
    சிலை எழுபது
    திருக்கை வழக்கம்
    சரஸ்வதி அந்தாதி
    சடகோபர் அந்தாதி(நம்மாழ்வார் பற்றியது)

கம்பராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்:

    கம்பசித்திரம்
    கம்பநாடகம்
    தோமறுமாக்கதை
    இயற்கை பரிணாமம்

நூல் அமைப்பு:

    காண்டம் = 6
    படலம் = 113
    மொத்த பாடல்கள் = 10569
    முதல் படலம் = ஆற்றுப்படலம்
    இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம்

காண்டங்கள்:

    பால காண்டம்
    அயோத்தியாகாண்டம்
    ஆரண்யகாண்டம்
    கிட்கிந்தா காண்டம்
    சுந்தர காண்டம்
    யுத்தகாண்டம்
    ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய “உத்தர காண்டம்”

சிறப்பு:

    மு.இராகவையங்கார் = “வடமொழி தென்மொழிக் காப்பிய நயங்களாகிய பொன் மையில் தம் சித்திரக்கோலைத் தோய்த்துத் தம் கப்பிய ஓவியத்தைக் கம்பநாடார் வரைந்தார்".
    வ.வே.சு.ஐயர் = “கம்பயராமாயணம் தனக்கு முதல் நூலான வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும்”
    எஸ்.மகாராஜன் = “உலகத்திலேயே வேறொரு நாட்டில், இவ்வளவு பழமையான கவிஞன் இருபதாம் நூற்றாண்டு மக்களுடைய மனதை இப்படி ஆட்கொண்டதில்லை”
    பாரதியார் = “கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்கிறார்.
    பாரதியார் = “கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என்கிறார்.
    கவிமணி = “வீசும் தென்றல் காற்றுண்டு – கையில் கம்பன் கவியுண்டு” என்கிறார்.
    “கல்வியிற் பெரியவர் கம்பர்”
    “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்”
    “கம்ப நாடன் கவிதையிற்போல் கற்றோருக்கு இதயம் களியாதே”
    “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்”
    தமிழுக்கு கதி = கம்பர், திருவள்ளுவர்
    96 வகை ஓசை வகைகளை கம்பர் கையாண்டுள்ளார்.

பொதுவான குறிப்புகள்:

    கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் = இராமாவதாரம்
    கம்பர் இறந்த இடம் = நாட்டரசன் கோட்டை
    கம்பரின் சமாதி உள்ள இடம் = நாட்டரசன் கோட்டை
    வான்மீகி எழுதாத “இரணியன் வதைப் படலம்” கம்பராமாயணத்தின் மிக சிறந்த பகுதியாக கருதப்படுகிறது.
    கமபராமாயணம் ஒரு வழி நூல்
    கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை 1000 பாடல்களுக்கு ஒருமுறை பாடியுள்ளார்.
    கம்பார் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் = திருவரங்கம்
    கம்பருக்கு தமிழக அரசு திருவழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து சிறப்பித்துள்ளது.
    இவர் மூன்றாம் குலோத்துங்கனின் அவை களப் புலவர் ஆவார்.
    இவரின் மகன் அம்பிகாபதி சோழன் மகளை காதலித்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் அம்பிகாபதி, அமராவதி இருவரின் உயிர் நீங்க, இவர் சோழ நாட்டை விட்டு வெளியேறினார்.
    15 நாட்களில் கம்பராமாயாணம் முழுவதும் எழுதி முடித்தார்(10569 பாடல்கள்)

மேற்கோள்:

    தாதகு சோலை தோறும் செண்பகக் காடு தோறும்
    எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தாலே
    இல்லாரும் இல்லை உடையாரும்
    இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்
    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால்
    இன்று போய் நாளை வா
    வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
    வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
    உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்
    கை வண்ணம் அங்குக் கண்டேன்
    கால் வண்ணம் இங்குக் கண்டேன்
    அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா

இன்று அன்று | 2005 டிசம்பர் 9: ஊழலுக்கு எதிரான சர்வதேச நாள் அறிவிக்கப்பட்டது

ஊழலுக்கு எதிரான சர்வதேச அமைப்பு, சமீபத்தில் வெளியிட்ட பட்டியலின்படி, ஊழல் நிறைந்த 175 நாடுகளில் 85-வது இடத்தில் இந்தியா உள்ளது. அதிகபட்சம் 100 மதிப்பெண் பெற்றால், ஊழலே இல்லாத நாடு என்றரீதியில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


0 மதிப்பெண் பெற்றால், ஊழல் மலிந்த நாடு என்று அர்த்தம். டென்மார்க் நாடு 92 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. நியூஸிலாந்து, பின்லாந்து ஆகிய நாடுகள் முறையே 2 மற்றும் 3-ம் இடத்தில் உள்ளன. இதில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் மதிப்பு, 38. 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் 36-ஆக இருந்த இந்தியாவின் மதிப்பு சற்றே உயர்ந்திருக்கிறது. அதாவது, ஊழல் சற்றுக் குறைந்திருக்கிறது என்றாகிறது. எனினும், நாட்டின் அனைத்து வளர்ச்சிப் பணிகளும், நலத் திட்டங்களும் ஊழலால் பாதிக்கப்பட்டிருப்பது கவலைதரும் விஷயம்தான்.

‘உலகின் அனைத்து நாடுகளிலும் இருக்கும் பொதுவான பிரச்சினை ஊழல்தான். சமூகம், அரசியல், பொருளாதாரத் தளங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியும், சந்தேகமில்லாமல் ஊழல்தான். ஜனநாயக அமைப்புகளைப் பலவீனப்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சியைத் தாமதப்படுத்தி, அரசையே செயலிழக்கச் செய்துவிடுகிறது ஊழல்’ என்று ஐநா குறிப்பிட்டிருக்கிறது. 2003 அக்டோபர் 31-ல் ஊழலுக்கு எதிரான மாநாடு அளித்த பரிந்துரைகளை ஐநா பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. போதைமருந்து, குற்றம் தொடர்பான ஐநா அலுவகப் பிரிவின் பொதுச் செயலாளரை, அந்த மாநாட்டின் செயலாளராகப் பணியாற்று மாறு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஊழல் தொடர்பான விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்காக, டிசம்பர் 9-ம் தேதியை சர்வதேச ஊழல் தடுப்பு நாளாக ஐநா அறிவித்தது. 2005 முதல் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளில் ஊழல் தொடர்பான விவாதங்கள், ஊழலின் பாதிப்பை விளக்கும் வீதி நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் என்று பல்வேறு வகைகளில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை உலக நாடுகள் இந்த நாளில் மேற்கொள்கின்றன. ஊழலுக்கு எதிரான பதாகைகள், வாசகங்கள் உள்ளிட்டவற்றை, பொதுஇடங்களில் வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தமிழ் இனத்திற்கு இனிய இரவு வணக்கம்