தனித்தமிழ் வளர்ப்போம்


Friday 23 January 2015

PGTRB விடைகள் : உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பலாம்

               முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில்  வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

          தேர்வர்கள் இந்த விடைகள் தொடர்பாக ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கான படிவமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் இந்த ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடைகள் தொடர்பாக தேர்வர்களின் ஆட்சேபங்களைப் பரிசீலித்தப் பிறகு இறுதி விடையுடன், தேர்வு முடிவுகளும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளன.

          பிழைகளைத் தவிர்ப்பதற்காக நிகழாண்டு ஒவ்வொரு விடைத்தாளும் இரண்டு முறை ஸ்கேன் செய்யப்பட உள்ளன.

பெங்களூரு : ஆசிரியர்களை நியமிக்க பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்: கல்வித்துறை அமைச்சர்

          கர்நாடகத்தில் ஆசிரியர் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று, அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.

             இதுகுறித்து வில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக இருக்கும் 11,200 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தகுதித் தேர்வில் 23 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இவர்களில் திறமையானவர்களைக் கண்டறிந்து பணி நியமனம் செய்வதற்காக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதற்காக அறிவிக்கை இன்னும் 10 நாள்களில் வெளியாகும். இதன்மூலம், 11,200 பணியிடங்கள் நிரப்பப்படும்.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். சில நேரங்களில் இணையதளம் சரியாக செயல்படாததால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காண்போம்.

அரசு அங்கீகாரம் பெறாமல் நடத்தப்பட்டு வந்த தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை குறித்து பெற்றோர்களுக்கு உரிய தகவல்களை வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக் குறி....

        அரசு பணியில் பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக் குறியாகி உள்ளது. 

தமிழக அரசுப் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சிஎனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஆட்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்களை தேர்வுசெய்வதற் காக ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்குகிறது. இதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவைப்படும் ஊழியர்கள், மாவட்ட அல்லது மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் தேர்வுசெய்யப்படுகிறார்கள். 

சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து வரும் காலியிடங்களுக்கு ஏற்ப, ஒரு இடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப் படையில் வேலைவாய்ப்பு அலுவலகம், பதிவுதாரர்களை பரிந்துரை செய்யும். அதில் இருந்து தேவைப்படும் பணி யாளர்களை சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வுசெய்துகொள்ளும். இந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு வகை செய்யும் அரசு பணிகள் விதி 10-ஏ செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக்குறியாகி உள்ளது. 

தமிழ்நாட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலைக்காக சுமார் 94 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள். பதிவு மூப்பு முறை நியமனத்துக்கு சிக்கல் வந்துள்ளதால் அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையே, இந்தியா முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களை பதிவுதாரர் களுக்கு வழிகாட்டும் வகையில் வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆலோசனை மையங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்காக நாடு முழுவதும் 100 மாதிரி வேலை வாய்ப்பு அலுவலகங்கள் தொடங்கப்பட உள்ளன. அதில் தமிழ்நாட்டில் உள்ள கோவை, வேலூர்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்மையின் பிறப்பிடம் திரு.சகாயம் I.A.S


சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி ஒரு சுருக்கமான .....

நச்'சென்ற பார்வை:
பெயர்:
உ.சகாயம்

பிறப்பு:
பெருஞ்சுணை கிராமம். ஊழலிலேயே பிறந்து வளர்ந்து வாழும் கோடிக்கணக்கான தமிழர்களில் தப்பிப்பிறந்தவர்.
பெற்றோர்:
வழக்கமான இந்திய பெற்றோர் போன்று மகன் டாக்டர்/இஞ்சினியர் என்பவர்கள் அல்ல.

*.அம்மா- மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்றவங்க
*.அப்பா- படிச்சு கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்னு சொல்றவங்க.

தொழில்:
சில காலம் மாவட்ட ஆட்சியாளர், மற்ற சமயங்களில் ஊழல் பெருச்சாளிகள் தீர்மானம் செய்யும் தொழில்
மிகவும் பிடித்த வாசகம்:
*.லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து
*.உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து
*.உயர உயரப் பற… வானம் வசப்படும்

அடிக்கடி கேட்ட வாசகம்:
*.உன்னை தண்ணியில்லா காட்டுக்கு….
*.இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை
நீண்டகால சாதனை:
*.23 ஆண்டுகளில் 24 முறை இட மற்றும் பணி மாற்றம்,
*.கடன் வாங்கி கட்டிய தன் ஒரே சொத்தை பகிரங்கமாய் அறிவித்த முதல் இந்திய ஐ.ஏ.ஸ் அதிகாரி.
*.மதுரையில் நடந்த முதல் நேர்மையான தேர்தல்.
*.சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளின் உழவன் உணவகம்
*.மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லைன்னு பெப்சி கம்பெனிக்கு எட்டு பூட்டு போட்டது.
*.சென்னையில் 600 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
*.பாலாறு மணல் கொள்ளை தடுப்பு
*.கோவை மதுபான ஏல சீரமைப்பு, பிரபல சைவ உணவக மதுபான பதுக்கல் முற்றுகை.
*.நாமக்கல் மாவட்ட ஒரு கோடி மரக்கன்று திட்டம்
*.கொல்லி மலை அடிவாரத்தில் தடுப்பணை திட்டம்
*.தொடுவானம் ~ கிராம மக்கள் தங்கள் புகார்களை இணைய வழியாக பதியும் திட்டம்
* நட்டத்தில் இயங்கிய கோ ஆப் டெக்ஸை லாபத்திற்கு மாற்றியது

உச்சகட்ட சாதனை:
உயிரையும் பணயம் வைத்து கிராணைட் மோசடி பதுக்கல்களை அம்பலப்படுத்தியது.

நண்பர்கள்:
அரசியலில் யாருமில்லை.

ஆறுதல்:
என்றும் வாய்மையே வெல்லும் என நம்பி ஆதரவளிக்கும் நல்ல உள்ளங்கள், இளைஞர்கள்.
அவ்வப்போது நீதிமன்றம்.

பலம்:
நேர்மை
லட்சியம்:
*.ஊழல் இல்லா இந்தியா
*.கிராமப்புற ஏழைகளுக்காக அனைத்து வசதிகளும் கூடிய இலவச மருத்துவமனை.
இதுவரை அறிந்த உண்மைகள்:
*நேர்மை நிச்சயம் வெல்லும்,
சில நேரங்களில் அது தாமதமானாலும் சரியே.

இதுவரை புரியாதது:
அடுத்த பதவியும் இடமும்
விரும்புவது:
தமிழ், தமிழர்கள், கிராமம், திலீபன் மற்றும் யாழினி

விரும்பாதது:
முக்கிய குற்றவாளிக்கே கடிதம் எழுத வேண்டிய நிலை.

நண்பர்களே..!
நேர்மைக்கு சொந்தக்காரரான சகாயம் போன்றஅதிகாரிகள் நம் நாட்டுக்கு நிறைய தேவை.
சினிமா, கதை நாயகர்களை விட்டுவிட்டு இவரை போன்ற நல்ல மனிதர்களை, நம் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக அறியத்தருவோம்.
ஊழலற்ற நல்ல சமூகத்திற்கு வழிகாட்டுவோம்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வுக்கான வினா-விடை வெளியீடு

        தமிழ் நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்ப் பணியிடங்களை  நிரப்ப தமிழக அரசு முடிவு செய்து அதற்கானப் பணியை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்தது.

காலிப்பணியிடங்களை  நிரப்ப கடந்த 10  ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலைப் பட்டதாரிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. அத்தேர்வுக்குறிய சரியான விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு கல்வி நிபுணர்களைக்கொண்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.  விடைகளை   www.trb.tn.nic.in   என்ற இணையதள முகவரியில் காணலாம்.

விடையில் ஏதேனும் ஆட்சேபணை இருப்பின் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் மூலம் தெரிவிக்கலாம். அல்லது  சென்னை டி.பி.ஐ வளகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வுவாரியத்தில் வைக்கப்பட்டுள்ள  பெட்டியில் வருகிற  ஜனவரி 
29 ந்தேதிக்குள் போட்டுவிட வேண்டுமென்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

அனைத்து அரசு, தனியார் கல்லூரிகளிலும் உளவுப் பிரிவு, பறக்கும் படை அமைக்க உத்தரவு

             கல்லூரிகள் வன்முறை களமாவதை தடுக்கும் விதமாக, அனைத்து அரசு,
 தனியார் கல்லூரிகளிலும் உளவுப் பிரிவு, பறக்கும் படை அமைக்க
 பாரதியார் பல்கலை உத்தரவிட்டுள்ளது.

  சமீபகாலமாக கல்லூரி வளாகம் மற்றும் வெளிப்புறங்களில், மாணவர் சங்க தேர்தல், துறைரீதியான நிகழ்ச்சிகள், பஸ் தின கொண்டாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், கோஷ்டி மோதல், கொலை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் மாணவர்கள் இறங்குகின்றனர். அவற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க அனைத்து கல்லூரிகளுக்கும் பாரதியார் பல்கலை உத்தரவிட்டுள்ளது. பாரதியார் பல்கலையை பொறுத்தவரை, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், அரசு, தனியார் கலைக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் பாரதியார் பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கட்டுப்பாடு

கல்லூரி வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும். அனைவரின் வருகை பதிவேடும் பதிவுசெய்வதுடன், கல்லூரி நேரத்தில் அவர்களை கண்காணிக்க வேண்டும். ராகிங், பஸ் படிக்கட்டில் பயணம், குற்ற சம்பவங்களில் ஈடுபடுதல் ஆகியன கூடாது, என மாணவர்களிடம் உறுதிமொழி பெற வேண்டும்.

கண்காணிப்பு: நுழைவாயிலில் வாகனங்களை முழு சோதனை செய்து, எண்ணை பதிவுசெய்ய வேண்டும்; பொருட்களை சோதனையிட வேண்டும். வளாகம், மாணவர் விடுதிகளின் முக்கிய இடங்களில் போலீசாரின் ஆலோசனையுடன் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். உளவுப் பிரிவு: மாணவர்களின் தகவல்களை சேகரிக்கும் உளவுப் பிரிவு ஒன்றை உருவாக்குவது அவசியம்; குறிப்பாக சட்டவிரோத செயல்களை போலீசாருக்கு தகவல் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

வளாக கண்காணிப்பு பறக்கும் படை

வளாக கண்காணிப்பு பறக்கும் படையில், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இருவர் கொண்ட குழு அமைக்க வேண்டும். இக்குழு, கல்லூரி மற்றும் மாணவர் விடுதியின் வருகை பதிவேட்டை ஆய்வுசெய்து, விதிமுறைக்கு மாறாக தங்கியுள்ளவர்களை கண்டறிய வேண்டும்.

மகளிர் விடுதியில், பெண் வார்டன் மற்றும் மகளிர் பேராசிரியர்கள் மூலம் சோதனை செய்ய வேண்டும். மாணவர் மற்றும் மாணவியர் விடுதியில், துணை வார்டன், இரு பேராசிரியர்கள், இரு மூத்த மாணவர்கள் கொண்ட குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

கவுன்சிலிங் மற்றும் கூடுதல் கல்விசார் நடவடிக்கை: ஆசிரியர்கள் கூடுதல் கல்விசார் நடவடிக்கைகள் குறித்து மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். மேலும், சட்ட விரோத செயல்கள், படிக்கட்டில் பயணம், ராகிங் உள்ளிட்டவை குறித்து அறிவுரை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

டி.என்.பி.எஸ்சி அறிவிப்பு - சான்றிதழ்களில் குளறுபடியா........

           விஏஓ எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வின் போது மூலச்சான்றிதழ்களில் குளறுபடி இருந்தால் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டிஎன்பிஎஸ்சி  அறிவித்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது,முடிவுகள் செப்டம்பரில் வெளியிடப்பட்டன,இதில் வெற்றி பெற்றவர்களூக்கான கலந்தாய்வு வரும் 27 ந் தேதி துவங்க உள்ளது . இதற்காக சம்மந்தப்பட்டவர்களுக்கு அழைப்பாணை குறுந்தகவல்மின்அஞ்சல்
மூலம் தெரிவிக்கப்பட்டது.சான்றிதழ் சரிபார்ப்பின் போது விண்ணப்பிக்கும் போது அனுப்பப்பட்ட  ஸ்கேன் செய்யப்பட்ட  அனைத்து சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்படும் அதில் குளறுபடி இருந்தால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.

சாதிச் சான்றிதழ் அச்சடிக்கப்பட்ட நிரந்தர அட்டையில் (பெண் விண்ணப்பதாரராக இருந்தால் அவரது தந்தைப் பெயரில் இருக்க வேண்டும்)
முன்னாள் ராணுவத்தினர் என்பதற்கான சான்றிதழ் தேர்வாணைய பணி வேட்பாளர்கான விதிமுறைகள் பத்தி 13(A)ல் குறிப்பிட்ட படிவத்தில் இருக்கவேண்டும். மாற்றுதிறனாளிகள் என்றால் அதற்காக உரிய மருத்துவக் குழுவினரிடம் இருந்து பெறப் பட்ட சான்றிதழ் மற்றும் உடல் ஊனத்தின் சரியான விழுக்காடு மற்றும் அவரது உடல் ஊனம் அவரது பணிகளைத் திறம்படச் செய்வதில் தடையாக இருக்காது என்று கருதுவதாகவும் மருத்துவக் குழுமத்தால் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

தேர்வாணையத்திற்கு அனுப்பிய ஆதரவற்ற விதவை சான்றிதழில் உள்ள குறைபாடு சம்மந்தப்பட்ட அதிகாரிமூலம் திருத்தி அதற்கான மேலொப்பம் பெற்ற மூலச்சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டுவர வேண்டும்  தேர்வர்கள் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைபடியே சான்றிதழ் சரிபார்த்தல்,கலந்தாய்விற்கு அழைக்கப்படுகின்றனர்.வரத்தவறினால் தரவரிசைக் குரியபயன்களை அவர்கள் இழக்க நேரிடும்.
 இவ்வாறு டி.என்.பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஃபுட்போர்டு மாணவர்களுக்கு ஆப்பு.. படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தால் இலவச பஸ் பாஸ் ரத்து!

         பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்களின் இலவச பஸ் பாஸ் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. படிக்கட்டில் பயணம்..நொடியில் மரணம் என்று எத்தனை இடங்களில் எழுதி வைத்தாலும் புட்போர்டு பயணம் என்பது தொடர்ந்தபடிதான் உள்ளது. குறிப்பாக சென்னையில், மாணவர்கள் பஸ்களில் தொங்கியபடி பயணிப்பதும், வன்முறை மற்றும் மோதல்களில் ஈடுபடுவதும், பயணிகளுக்கு இடையூறு செய்வதும் அதிகரித்தபடி உள்ளது.

இதையடுத்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை உருவாக்க, தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வழி காட்டுதல் நெறிமுறைகள்அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை அனுப்பியுள்ள இந்தச் சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய குறிப்புகள்மாணவர்கள் சிறிய அளவிலான அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்களுடைய பெற்றோர் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

2 ஆவது முறையாக வன்முறையில் ஈடுபட்டால் அந்த மாணவரின் அடையாள அட்டை, இலவச பஸ்பாஸ் ஆகியவை குறிப்பிட்ட காலத்துக்குப் பறிமுதல் செய்யப்படும். தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் மாணவரின் டி.சி கொடுக்கப்பட்டு, படிப்பில் இருந்தும் அவர் நீக்கப்படுவார். குற்றச் செயல்களில் ஈடுபட்டால் வேறு எந்த கல்லூரியிலும் சேர்ந்து படிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்படும். மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்தை தடுக்க மாநகர போக்குவரத்து அதிகாரிகள் போலீசார் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுபடிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்கும். அதன் பேரில் அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவனின் இலவச பஸ் பாஸ் ரத்து செய்யப்படும். பஸ் டே கொண்டாட்டத்துக்கு தடை விதிப்பது, கல்லூரி மாணவர்களுக்கு தனியாக மாநகர பஸ்களை இயக்குவது அடிக்கடி பிரச்சினை ஏற்படும் வழித்தடங்களில் கதவு வைத்த பஸ்களை இயக்குவது ஆகிய நடைமுறைகளை பின்பற்றும்படியும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Friday 16 January 2015

47 வகை நீர்நிலைகள்



   ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47.. எங்கே மறைந்து போனது ? மறைந்து போகவில்லை மறைக்கப்பட்டுவிட்டது ..
47 வகை நீர்நிலைகள்
1.அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்
2.அருவி – (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது
3.ஆழிக்கிணறு -(Well in Sea-shore) கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
4.ஆறு -(River) – பெருகி ஓடும் நதி
5.இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்
6.உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட 
 கிணறு
7ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை
8.ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது
9.ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்
10.ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் 
  நீர்
11.கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் 
  சுவர்கட்டிய கிணறு
12.கடல் -(Sea) சமுத்திரம்
13.கம்வாய்(கம்மாய்)-(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்
14.கலிங்கு -(Sluice with many Venturis) ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
 15.கால் – (Channel) நீரோடும வழி
16.கால்வாய் -(Suppy channel to a tank )ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி
17.குட்டம் – (Large Pond) பெருங் குட்டை
18. குட்டை- (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை
19. குண்டம் -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை
20. குண்டு – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
21. குமிழி – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு
22. குமிழி ஊற்று – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . குளம் -(Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.
24. கூவம் – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு
25 . கூவல் – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்
26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
27. கேணி–( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு
28. சிறை -(Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை
29. சுனை -(Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை
30. சேங்கை – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்
31. தடம் -(Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்
32 . தளிக்குளம் -(tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.
33. தாங்கல் – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்
34. திருக்குளம் – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.

35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
36. தொடு கிணறு -(Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்
37. நடை கேணி – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு
38. நீராவி -(Bigger tank with center Mantapam) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்
39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
40. பொங்கு கிணறு -(Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு
41. பொய்கை -(Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

42. மடு -(Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்
43. மடை -(Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு
44. மதகு -(Sluice with many venturis) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது
45. மறு கால் -(Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்
46. வலயம் -(Round tank) வட்டமாய் அமைந்த குளம்
47. வாய்ககால் -(Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்

ஆசிரியர் போட்டி தேர்வு: புதிய விடைத்தாள் அறிமுகம்


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு, ஜன., 10ல் நடக்க உள்ளது. இதை கண்காணிக்க, மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதில் உறுப்பினர் செயலராக, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் எஸ்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர். மையம் அமைப்பது, வினாத்தாள், விடைத்தாள்களை கொண்டு சேர்ப்பது, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்வர். இத்தேர்வில், முதன்முறையாக தேர்வர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுகிறது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்தாண்டுகளில், இத்தேர்வு விடைத்தாள்களில் தேர்வர்கள் தங்கள் பெயர், தேர்வு எண்ணை வட்டமிடுவர். அதில் சில இடங்களில் தவறு ஏற்பட்டது; சர்ச்சைக்கும் வழிவகுத்தது. இந்நிலையில், முறைகேடு களை தவிர்க்க, இம்முறை தேர்வர்களுக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுகிறது. அதில் அவர்களின் பெயர், தேர்வு எண் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)


   தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476 E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

      இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!
வாழ்க தமிழ் வளர்க தமிழ்