தனித்தமிழ் வளர்ப்போம்


Tuesday 24 February 2015

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா?

     உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள் இன்று 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரபூர்வமாக உள்ளன.

உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

தாய்மொழிக்கான இடம் எது?

பல மொழிகளோடு பிறந்து வளர்ந்து, தன் தோழமை மொழிகள் எல்லாம் சிதைந்த போதிலும் இன்றளவும் தன் இளமைத் தன்மையை இழக்காமல் வாழ்ந்து வளர்ந்து நிற்கும் ஒற்றை மொழி வாழும் செம்மொழி நம் தமிழ் மொழிதான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியத்திலும் பேச்சுவழக்கிலும் இருந்த ஒரே மொழி இன்றளவும் இருக்கிறதென்றால் அது தமிழ்தான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

ஆனால், இந்த வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க தாய்மொழியைப் பேசுவதற்குத்தான் நாம் தயங்குகிறோம். தமிழில் பேசினால் தரம் குறைந்துவிடும் என்று தப்புக்கணக்கு போடுகிறோம்.

ஆங்கிலம்தான் அறிவா?

சிந்தனையின் தொடக்கப்புள்ளி தாய்மொழி என்று தெரிந்துகொண்ட நாம் நம் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைப்பதைத்தான் பெருமையாக கருதுகிறோம்.

ஆங்கிலம் மட்டும்தான் அறிவு. ஆங்கிலமொழியில் படித்தால்தான் அறிவு மேம்படும். வேலை வாய்ப்பு கிடைக்கும். நல்ல சம்பளம் வாங்க முடியும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஆங்கிலம் கற்றால்தான் அகிலமே மதிக்கும் என்பது எந்த விதத்திலும் உண்மை இல்லை. ஆனால், இதைப் புரிந்துகொள்ளாததால்தான் இன்றைய பெற்றோர்களின் மனநிலை வேறு திசையில் பயணிக்கிறது.

'என்னாலதான் தஸ் புஸ்னு இங்கிலீஷ் பேசுற மாதிரி படிக்க முடியலை. என் குழந்தையாவது படிக்கட்டும்' என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்கிறார்கள். அதையே பெருமைக்கான அடையாளமாக கருதுகிறார்கள்.

உண்மையில், அப்படிப் படிக்கும் மாணவர்கள் இயல்பாக சிந்திக்க முடிகிறதா?

கல்வி என்பது அறிவை மேம்படுத்துவதற்காக அமைய வேண்டுமே அல்லால் ஒருவனின் மனப்பாட திறனை வெளிப்படுத்துவதாக அமையக்கூடாது. ஆனால், ஆங்கில மொழி நமக்குள் புரிந்துகொள்ளும் திறனை வளர்க்காமல் மனனம் செய்யும் முறையை மட்டும் கற்றுக்கொடுக்கிறது.

தாய்மொழி மூலமாகவே ஒருவர் தான் கூற விரும்பும் கருத்தை தெளிவாகவும் ,முழுமையாகவும் ,ஆழமாகவும் தெரிவிக்க முடியும் . ஒவ்வொருவரும் சிந்திப்பது தன் சொந்த தாய்மொழியில்தான். அதுதான் இயல்பான அடிப்படை புரிதலைக் கொடுக்கும். அதுவே அந்த குழந்தையின் படைப்பாற்றலை வளர்த்தெடுக்கும்.

ஆனால், அந்த சூழலை வளர்த்தெடுக்க வேண்டிய தமிக அரசு எந்த வித அக்கறையும் காட்டாததுதான் வருத்த்ததின் உச்சம். ஒரு மாநிலத்தின் ஆட்சி மொழியை ஒரு பாடமாகக்கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற அவலநிலை தமிழகத்தில் நிலவுவது எவ்வளவு பெரிய முரண்.

"தாய் மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை

தாய் மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை " என்பது உலகறிந்த உண்மை.

தேவை என்றால் ஆங்கில மொழியில் அனைத்து பாடங்களையும் படிப்பதை ஊக்கப்படுத்துவதை விட ஆங்கில மொழி அறிவை மேம்பட செய்யலாம்.இந்த நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, எந்த ஒரு குழந்தைக்கும் தாய்மொழிக் கல்விதான் சிறந்தது என்பதை நாம் செயல்படுத்துவோம்.

இந்த தருணத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?

அனைத்து தனியார் அரசுப் பள்ளிகளுக்கும் தமிழ் வழிக் கல்வி கட்டாயம் என்பதை சட்டமாக்குதல் வேண்டும். ஆங்கிலம் மொழிப் பாடமாகவும் , தமிழ் பயிற்று மொழியாகவும் இருத்தல் வேண்டும் .

மம்மி, அங்கிள் என்று குழந்தைகளை அழைக்கச் சொல்லி பெருமைப்படுவதை கொஞ்சம் மாற்றி, அழகுத் தமிழில் அன்பை வளர்ப்போம். முடிந்தவரை தமிழை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்போம். தமிழில் பேச பயிற்சி தருவோம்.

தமிழில் பேசுவதே தகுதி என்பதை நம் அடுத்த தலைமுறைக்கு உணர்த்துவோம்.

ஏன் தமிழின் பெருமையை உணர்த்த வேண்டும்?
எந்த மொழிக்கும் இல்லாம மென்மையும், ஆழமும், அர்த்தமும் தமிழ் மொழிக்கு இருக்கிறது.

சித்தப்பா, மாமா என்ற இரண்டு உறவுகளும் வெவ்வேறு அர்த்தம் தருபவை. ஆனால், ஆங்கிலத்தில் இருவரையும் அங்கிள் என்றே அழைப்பது உறவின் அர்த்தத்தையே மாற்றி விடுகிறது.

யானைக்கு தமிழில் வேழம், களிறு, பிடி என்று எத்தனையோ வார்த்தைகள் இருக்கின்றன. இங்கிலாந்திலே இல்லாத ஒரு உயிரினம் யானை. ஆனால், அந்நாட்டு மொழியில் எலிபேண்ட் (elephant) என்று அழைப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்?

மிகப்பெரிய ஆங்கில அறிஞர்கள் கூட தங்கள் படைப்புகளில் கண்ணுக்கு கண்: பல்லுக்குப் பல் என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், திருவள்ளுவர் மட்டும்தான் உனக்கு தீமை செய்தவனுக்குக் கூட ,அவன் வெட்கப்படும் படி நல்லது செய் என்று சொல்கிறார்.

''நாம் பயிலும் கல்வி தாய்மொழியில் இருந்தால் மட்டுமே சிந்திக்கும் திறன் சிறப்பாக அமையும்'' என்றார் மகாத்மா காந்தி. இனியும் தமிழில் பேசுவது தகுதியா?தரக்குறைவா?

கணினி ஆசிரியர் நியமனத்தில் அதிரடி: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு.

 

     கணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர்தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. அரசு பள்ளிகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தது.

இதற்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, மாநில பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு, இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

இதில், கணினி பட்டதாரிகளுடன், இதர பாடங்களில் பட்டம் பெற்றவர்களின் பெயர்களும் இருந்தன. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகியது. இதையடுத்து, கடந்த டிசம்பரில் நடப்பதாக இருந்த, சான்றிதழ் சரிபார்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மையம், தேதி உள்ளிட்ட விவரங்கள், டி.ஆர்.பி., இணையதளமான trb.tn.nic.in இல் , நேற்று மாலை வெளியிடப்பட்டது. வரும், 27ம் தேதி முதல், மார்ச், 2ம் தேதி வரை, வேலூர், சேலம், மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இது தொடர்பான அழைப்பு கடிதம்,அதே இணைய தளத்தில் மட்டும் வெளியாகும்.

தனிப்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு துவங்க இன்னும், இரண்டு நாட்களே உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பட்டதாரிகளுக்கு தகவல் உரிய நேரத்தில் சென்று சேருமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது. மேலும், கால அவகாசம் குறைவாக உள்ளதால், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த அழைக்கப்படும் பட்டதாரிகளில், யாரேனும் விடுபட்டிருந்தால், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகமும், பட்டதாரிகளிடையே எழுந்துள்ளது.

கல்வித்துறை செய்திகள்.. உபரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்'


    மாநிலம் முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விரைவில், பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர்.

   தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளிகள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 2014 ஆக., ௩௧ன் படி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்களையும், உபரி ஆசிரியர்கள் பட்டியலையும், 25-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உபரி பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர்கள், கலந்தாய்வின்படி பிற ஒன்றியங்கள், மாவட்டத்துக்குள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம்செய்யப்பட உள்ளனர்.

     ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும், சரியும் மாணவர்கள் எண்ணிக்கை, விதிமுறைகள் மீறி, 'நிர்வாக மாறுதல்' என்ற பெயரில் வழங்கப்படும் இடமாறுதல்கள் காரணமாகவே, உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அந்தந்த ஆண்டு துவக்கத்தில் ஆசிரியர், மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு கலந்தாய்வு நடத்தினால், உபரி, பற்றாக்குறை என்ற பேச்சுக்கு இடமில்லாமல் போகும்' என்றார்.

ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்பாட்டம்


      15 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்அடுத்த மாதம் 8ம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கூட்டு நடவடிக்கை குழுவின் நிர்வாகிரங்கராஜன், அகவிலைப்படி 100 சதவீதத்தை கடந்து விட்டதால் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 6வது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு வழங்கியுள்ள அனைத்து படிகளையும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தமிழ் பாடத்தை கடைசியாக வரிசைப்படுத்தியுள்ள அரசாணை 266ஐ திருத்தி தமிழ்பாடத்தை முதலாவதாக வைத்து புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு பதவி உயர்வுக்கும் 6 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும் தொடக்கப்பள்ளி முதல் மேனிலைப்பள்ளி வரை தமிழ் வழி கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இந்தகோரிக்கைகளை வலியுறுத்தி டுத்த மாதம் 8ம் தேதி ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

     இதேபோல் புதுக்கோட்டையில் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில செயலாளர் சத்திய மூர்த்தி, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8 ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வராவிட்டால் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

    அரியலூரில் நடைபெற்ற ஆசிரியர் கூட்டு குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நம்பிராஜ், தாய்மொழி தமிழை முதன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தார்.

கல்வி இயக்குனர் அலுவலகம் முற்றுகை: கல்லூரி ஆசிரியர்கள் 300 பேர் கைது


          அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம் ஆகியவற்றின் சார்பாக 3 நாள் மறியல் போராட்டம் அறிவித்து இருந்தனர்.


சம்பளம், பதவி உயர்வு, பணிமேம்பாடு, புதிய பென்சன் திட்டம் ரத்து உள்பட 28 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. முதல் நாளான இன்று சென்னை கல்லூரி சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

போலீஸ் தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான கல்லூரி ஆசிரியர்–ஆசிரியைகள் இதில் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சுப்பாராஜ், காந்திராஜன், எஸ்.எஸ்.வெங்கடாசலம், திருச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கல்லூரி இயக்குனரக அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். 300–க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி ஆயிரம் விளக்கில் உள்ள சமுதாய கூடத்துக்கு கொண்டு சென்றனர்.

முன்னதாக ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:–

கல்லூரி ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். காலதாமதம் செய்தால் போராட்டம் தீவிரமாகும். தொடர் போராட்டங்களை நடத்துவோம். காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

"ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்''

    அரசுப் பள்ளிகளின் தரம் உயர ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.உலக தாய்மொழி நாளையொட்டி,
தமிழ்நாட்டு கல்வி இயக்கம், தமிழ் வழிக்கல்வி இயக்கம், தமிழர் தேசிய முன்னணி,திருவள்ளுவர் ஞான மன்றம் சார்பில் அரியலூர் மாவட்டம் முழுவதும் திறந்த வாகனத்தில் பிரசாரம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நடைபெற்ற பிரசாரத்தில், தமிழை இறையாண்மை மிக்க மொழியாகவும், தமிழ் வழிக்கல்வி மொழியாகவும் ஆக்கப்பட வேண்டும்.மேலும், தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்திட வேண்டும்.

இதுமட்டுமன்றி, அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை திணிக்கக் கூடாது,அரசுப்பள்ளிகளின் தரம் உயர ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள், தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டனர்.

B.Ed., & M.Ed., படிப்பு காலம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது..அமைச்சர் பழனியப்பன்.


சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் க.அன்பழகன், டில்லிபாபு ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரி உள்பட மொத்தம் 689 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. ஓராண்டு படிப்பாக இருப்பதை 2 ஆண்டு படிப்பாக நீட்டிக்க தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த ஆண்டு முதல் அனைத்து கல்வியியல் கல்லூரிகளிலும் 2 வருட படிப்பாக மாற்றி அமைக்க சொல்லியிருந்தது. இதை அமுல்படுத்த கட்டிட வசதி, கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை உள்ளது.இதனால் இந்த ஆண்டு இதை செயல்படுத்த முடியாது,

என்றும் இதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் 2016–17–ம் ஆண்டுகளில் இதை தமிழ்நாட்டில் செயல்படுத்தலாம் என்றும் கருத்துரு அனுப்பி உள்ளோம். எனவே உடனே இதை அமுல்படுத்த வாய்ப்பில்லை. சுயநிதி கல்வியியல் கல்லூரி கூட்டமைப்பின் சார்பில் கோர்ட்டில் ஏற்கனவே தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு ஏற்ப அரசு முடிவெடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday 17 February 2015

பள்ளிக் கல்வியில் மாற்றம் அவசியம்: அப்துல் கலாம்


      இந்தியா தொழில்திறன் மிக்க நாடாக உருவாக பள்ளிக் கல்வியில் மாற்றம்அவசியம் என குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வலியுறுத்தினார்.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியின் பொன் விழா, அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா தலைமையில் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உறுப்பினர்கள் டாக்டர் செய்யதா அப்துல்லா, ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொன்விழா ஆண்டு கல்வெட்டை குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் திறந்து வைத்து பேசியதாவது:

பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு இரண்டு சான்றிதழ்களை வழங்க வேண்டும். அவற்றில் ஒன்று மதிப்பெண் சான்றிதழாகவும், மற்றொன்று உலகளாவிய திறன் மேம்பாட்டுச் சான்றிதழாகவும் இருக்க வேண்டும். இந்த 2- ஆவது சான்றிதழை வழங்குவதற்காக இப்போது இருக்கும் பாடத்திட்டத்தில் 25 சதவிகிதம் குறைத்து தொழில்திறன் மேம்பாடு உள்ளிட்ட பாடத்திட்டங்களை கற்பிக்க வேண்டும்.

தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாற்றம் மிக அவசியம். பள்ளிக் கல்வியை மாணவர்களுக்கு நல்ல அனுபவக் கல்வியாக மாற்றினால் மட்டுமே தகுதி வாய்ந்த, அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.

ஆந்திரத்திலும், தமிழகத்தில் கோவையிலும் "வளரும் இந்தியா 2020' என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நான் அளித்த 10 உறுதிமொழிகள் வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், இடைநின்ற மாணவர்களுக்கும் இதை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த லட்சியம் வெற்றியடைந்தால் ஒவ்வொரு மாணவனின் லட்சியமும் வெற்றியடையும் என்றார்.

விழாவில், மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார், காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பின்லாந்து கல்விமுறை! அவசியம் படியுங்கள்!


           அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? படிச்சா செம கடுப்பாகிவிடுவீர்கள்!

பின்லாந்து என்ற நாடு, நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து.
உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டி போட முடியவில்லை.

‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED - organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது
நடைபெறும். இதற்கு PISA-Programme for international students assessment என்று பெயர். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள் பின்வரிசையில் இருக்க… பின்லாந்து எப்போதும் முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே சுகூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே .சி., மூன்று வயதில் எல்.கே.சி., நான்கு வயதில் யு.கே.சி என்ற சித்ரவதை அங்கே இல்லை.

கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான். இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை.

ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம்
செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக்
கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் ஆய கலைகள் ௬௪ (64) க்கும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.

முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

1. கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை.

2. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.

3. இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை.

4. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்.

5. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்.

6. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது.

7. முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். ‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டு உள்ளது. அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்.

8. அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். ‘டியூஷன்’ என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை.

9. தேர்வுகளை அடிப்படையாகக்கொள்ளாத இந்தக் கல்வி முறையில்
பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். இது எப்படி
என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர். அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது.

உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை.

பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது.

ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. ‘பின்லாந்து கல்விமுறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது. றிமிசிகி ஆய்வில் எல்லா நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை வந்தடைய முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க முடியும்’ என்கிறார்கள். இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை; மதிக்கத்தக்க மனநிலை.

கல்வியில் இருந்து நாம் பெறவேண்டிய சாராம்சம் இதுதான். இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும், பராமரிப்பதிலும் பின்லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

சொல்லப்போனால் பின்லாந்து ஆசிரியர்கள்தான் இதற்கு முழுமுதல் காரணம். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எசு.,
ஐ.பி.எசு போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம். அதே நேரம், அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!

மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட், குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது, நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!

பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப் பயிலும் பின்லாந்து போராளிகளிடம்…

3 நபர் கமிஷன் பரிந்துரைப்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் 4 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும்

 

        இடை ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயிப்பது குறித்து 4 வாரத்துக்குள் பரிசீலித்து பதில் அளிக்க வேண்டும் அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ராபட் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 1999ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே சம்பள தொகையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.இந்த நிலையில், மத்திய அரசு 6வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, மத்திய அரசுபள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ9,300, தரச்சம்பளம் ரூ.4,200 என்று நிர்ணயம் செய்துள்ளது.

இதையடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்ய தமிழக அரசு 3 நபர் கமிஷன் அமைத்தது. இந்த 3 நபர் கமிஷன், 6வது சம்பள கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யவேண்டும் என்று தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், இந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பளத்தை மாற்றி அமைக்காமல் தமிழக அரசுமவுனம் காத்து வருகிறது. எனவே, 3 நபர் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சஞ்சய் காந்தி, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சி.செல்வராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

இதை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது 6வது சம்பள கமிஷன்பரிந்துரை, அதனடிப்படையில் அமைக்கப்பட்ட 3 நபர் கமிஷன் அறிக்கை அடிப்படையில், தமிழக நிதித்துறை செயலர், பள்ளிக்கல்வித்துறை செயலர், தொடக்கப்பள்ளி இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் வெய்ட்டேஜ், 5% மதிப்பெண் தளர்விற்கான வழக்கு  மார்ச் 9 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.


SUPREME COURT OF INDIA

Case Status Status : PENDING

Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014

V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

Pet. Adv. : MR. T. HARISH KUMAR

Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT

Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS

Listed 1 times earlier                                     Likely to be Listed on : 09/03/2015


ஒரே ஆண்டில் இரு பட்டங்கள் ஆசிரியர் பணி வழங்க உத்தரவு


      ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.திண்டுக்கல் தீபா தாக்கல் செய்த மனு:
பி.ஏ., (தமிழ்) 2004--07 ல்படித்தேன். பி.எட்.,ஜூலை 2008ல் தேர்ச்சி பெற்றேன். 2008ல் எம்.ஏ., (தமிழ்) படிப்பில் சேர்ந்தேன். 2009 நவம்பரில் எம்.ஏ.,தேர்ச்சி பெற்றேன். முதுகலை பட்டதாரி (தமிழ்) ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு 2012 அக்டோபரில் எழுதினேன். 108 மதிப்பெண் பெற்றேன்.'எம்.ஏ., மற்றும் பி.எட்., ஒரே ஆண்டில் படித்துள்ளதால் விதிகள்படிபணி நியமனம் வழங்க முடியாது' என ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர்2013 ஜன.,20 ல் நிராகரித்தார். அதை ரத்து செய்து பணி வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார்.

மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் வி.பன்னீர்செல்வம், ராமநாதன் ஆஜராகினர்.நீதிபதி உத்தரவு: மனுதாரர் பி.ஏ., முடித்தபின் பி.எட்., படித்துள்ளார். பின் எம்.ஏ., படித்துள்ளார். பி.எட்., மற்றும் எம்.ஏ., ஒரே காலத்தில் படிக்கவில்லை. பணி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு முதுகலை ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்


  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

செவ்வாய்க்கிழமையும்(இன்றும்) தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் மூன்று மண்டலங்களாகப் பிரித்து விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

விழுப்புரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், சேலத்தில் உள்ள சாரதா வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், மதுரையில் உள்ள ஓ.சி.பி.எம். மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

முதல் நாள் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்வை 1 லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினர்.

இந்தத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வர்கள் 1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ரயில்வே துறையில் உள்ள ஊழியர்களின் வருகை பதிவை ஆதார் அட்டை இணைப்புடன் ஏப்ரல் 1ம் தேதி முதல் விரல்ரேகை வருகை பதிவு!!


     நாடு முழுவதும் ரயில்வே துறையில் உள்ள அலுவலர்கள், ஊழியர்களின் வருகை பதிவை ஆதார் அட்டை விவரங்களுடன் கூடிய மின்னணு விரல் ரேகை பதிவு முறையை செயல்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ரயில்வே அலுவலகங்களில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடும் முறை அமலில் உள்ளது. அதேநேரத்தில் ரயில்வே பணிமனைகளில், தொழிற்சாலைகளில் வருகைப்பதிவு அட்டை முறை உள்ளது.
  இந்நிலையில்மத்தியஅரசு,பொதுத்துறைநிறுவனங்களில்ஜன.26ம்தேதி முதல்ஆதார்அட்டையுடன் இணைந்த விரல் ரேகை மூலம் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

   மத்திய அரசு உத்தரவின் அடிப்படையில் ரயில்வேயும் ஆதார் அட்டை அடிப்படையிலான மின்னணு விரல் ரேகை முறை வருகை பதிவை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக ரயில்வேயில் பணியாற்றுபவர்கள் அனைவரும் ஆதார் அட்டையை வாங்கி விட்டதை உறுதி செய்ய மண்டல பொதுமேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய வருகை பதிவு முறையை முதல்கட்டமாக, மண்டல ரயில்வே தலைமை அலுவலகங்கள், தொழிற்சாலை, பராமரிப்பு பணிமனைகளில் நிர்வாக அலுவலகங்கள், கோட்ட ரயில்வே அலுவலகங்கள், கொல்கத்தா மெட்ரோ, லக்னோ ரயில்வே வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகிய மையங்களில் மட்டும் அமல்படுத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
  இதற்கு தேவையான உதவிகளை தேசிய தகவல் மையத்திடம் பெற்றுக் கொள்ளும்படியும் மண்டல பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்தப் பணிகளை மண்டல ரயில்வேக்கள் ஏதும் தொடங்காததால் மத்திய அரசு உத்தரவுப்படி ஜன.26ம் தேதி முதல் புதிய வருகை பதிவு முறையை ரயில்வேயில் அறிமுகமாகவில்லை. எனவே ஏப்.1ம் தேதி முதல் புதிய முறை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே வாரியம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

TNTET: 5% மதிப்பெண் சலுகை நியாயமானதுதானா?

இனிய நண்பர்களே,

     ஆசிரியர் தகுதி தேர்வு ஆரம்பித்த போது 60% அதாவது 90 மதிப்பெண் எடுத்தால் வெற்றி என்று ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்ணயித்தது. பிறகு 2013 ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றவர்களை கொண்டு கலந்தாய்வு நடத்தப்பட்டு பிறகு 5% மதிப்பெண் தளர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

பிறது மீண்டும் ஒரு கலந்தாய்வு நடைபெற்றது 5% மதிப்பெண் தளர்வுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்த நிலையில் வெயிட்டேஜ் பிரச்சனை வந்தது வெயிட்டேஜை நீக்கினால் 90 மதிப்பெண் மேல் பெற்றவர்கள் ஆசிரியராக தேர்வு பெறுவார்கள் என்பதால் 5% மூலம் தேர்ச்சி பெற்றவர்களால் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் பலர் வெயிட்டேஜை மட்டும் நீக்க வலியுறுத்தினார். 

ஆனால் அது அரசின் கொள்கை என நீதிமன்றம் அரசானை GO 71  ஐ நீக்க மறுத்தது. இந்நிலையில் GO 25 அரசானை ரத்து செய்யப்பட்டது இருப்பினும் தற்போது பணியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் தீர்ப்பு அமைந்தது.  இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகிறது இவை மார்ச் 26 அன்று விசாரனைக்கு வரவுள்ளது.

நடக்க போவது என்ன ??நியாயம் என்ன??

பல்வேறு மாநிலங்கள் மதிப்பெண் சலுகைகளை வழங்கியுள்ளது போலவே தமிழக அரசும் வழங்கியுள்ளது. ஆனால் 5% மதிப்பெண் சலுகை வழங்கப்பட்ட நேரம் தான் தற்போது பிரச்சனை கலந்தாய்வு நடத்தப்பெற்ற பின் அளிக்கப்பட்டது மற்றும் SC/ST பிரிவினருக்கும் BC/MBC பிரிவினருக்கும் 5% என ஓரே மாதிரியாக மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதே பிரச்சனை.

ஒரு அரசு மதிப்பெண்ணில் சலுகை வழங்குவதில் தவறு இல்லை அது அரசின் கொள்கை அதை நோட்டிபிகேசன் செய்யும் போது வழங்காமல் இடையில் வழங்குவது நியாயமா என ஒரு சாரர் கேள்வி எழுப்புகின்றனர். 

புரிந்து கொள்ள வேண்டும்
 ஆசிரியர் தகுதி தேர்வு என்பது ஆசிரியர் ஆவதற்கான தகுதியே தவிர அவை வேலைக்கான போட்டித் தேர்வு அல்ல எனவே சலுகை மதிப்பெண் என்பது நோட்டிபிகேசனில் குறிப்பிடாமல் இடையில் வழங்குவதற்கும் பணிநியமனத்திற்கும் சம்மந்தம் இல்லை ஆனால் ஒரு கலந்தாய்வு நடைபெற்ற பின்பு வழங்கப்பட்டது மட்டும் தான் பிரச்சனை எனவே முதலில் கலந்தாய்வில் அதாவது 90 மதிப்பெண் மேல் பெற்றவர்களை அழைத்த பின்பு 5% மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வுக்கு அழைப்பது  என்பது சரி  அல்ல என ஒரு சாரர் தெரிவிக்கின்றனர். 

பணிநியமனம் என்பது வேறு தகுதி தேர்வு என்பது வேறு எனவே இனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தால் 5% மதிப்பெண் சலுகை செல்லது என கூறமாட்டார்கள் ஆனால் 90 மதிப்பெண் மேல் பெற்றவர்களுக்கு முதலில் பணி வழங்கவேண்டும் என தீர்ப்பு வழங்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு கூட ஏற்படலாம் ஆனால் தமிழக அரசு எடுக்கும் முயற்சியில் தான் இவர்களின் தலையெழுத்தே உள்ளது. 

5% மதிப்பெண் தளர்வு அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரியாக அளித்ததை மாற்றி வேறுவிதத்தில் அளிக்க வாய்ப்பு உள்ளது அல்லது அரசின் 5% மதிப்பெண் தளர்வை தொடரவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கலாம் ஏனென்றால் 5% மதிப்பெண் சலுகையை ரத்து செய்தால் மற்ற மாநிலங்களில் வழங்கப்பட்ட மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய இந்த தீர்ப்பு வழிவகுக்கும் அதனால் 5% மதிப்பெண் தளர்வை முழுமையாக ரத்து செய்ய வாய்ப்பு குறைவு. ஆனால் 5% மதிப்பெண் தளர்வு மூலம் பணியில் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக சட்டப்படி உணரமுடிகிறது.

உண்மைகள்
90 மேல் பெற்றவர்களுக்கு பணிநியமனம் விரைவில் கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது

5% முழுமையாக ரத்து செய்வதற்கான வாய்ப்பு குறைவு ஆனால் தற்போது நியமிக்கப்பட்ட ஆசிரியர் நியமனங்களில் 5% மதிப்பெண் தளர்வு மூலம் சென்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் ஆனால் அரசு இவற்றில் தலையிட்டு ஏதேனும் மாற்றம் செய்ய நேரிடலாம்.

தற்போது பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவதால் தற்போது பணிநியமனங்கள் பெறுபவர்களை தவிர இனி பெரிய அளவில் பணிநியமனங்கள் நடைபெறுவது கடினம் என்பது உண்மையிலே பெரிய உண்மை சமீபத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் பல பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு அந்த பள்ளியில் மாணவர்கள் இல்லை எனவே அவர்களுக்கே வேலை இல்லை இதில் நமக்கு எப்படி என்பது புரியவில்லை டெப்லாய்மென்ட் மூலம் அவர்கள் பணியிடம் உள்ள பள்ளிகளுக்கு மாற்றப்பட்டால் புதிய நியமனங்களே ஏற்பாடாது.

5% மதிப்பெண் மூலம் வெற்றி பெற்றவர்கள் பலர் அரசு உதவி பெறும் பள்ளியில் வேலையில் உள்ளனர் எனவே அவை நியாயம் என்றால் 5% மூலம் வெற்றி பெற்றது செல்லும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட வாய்ப்பு உள்ளது அதாவது இவை தனி வழக்காக புதிதாக ஏற்படுத்தபட உள்ளதாக 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்றவர்கள் கூறுகிறார்கள் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக செய்ல்படபோவதாக கூறுகின்றனர் எது எப்படியோ வேலை என்பது கண்டிப்பாக கிடைப்பவர்களுக்கு கிடைக்கும்.

அரசுக்கு எதிராக போராடாமல் நியாயங்களை அரசின் நெறிமுறை கோட்பாடுகள் மூலம் அதாவது அரசின் செயல்பாடுகளில் ஏற்படும் பிரச்சனைகளை முறையாக நீதிமன்றத்தை அனுகி மட்டுமே பெற முற்படுங்கள் நியாயத்தின் பக்கம் தீர்ப்பு வெல்லும்.

நன்றி
கார்த்திக் பரமக்குடி

Thursday 12 February 2015

குழந்தைகளின் அறிவாற்றலைப் பெருக்க அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முருங்கை மரம்: தமிழக அளவில் தருமபுரியில் முதல் முயற்சி


அரசுப் பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் முயற்சியாக தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முருங்கை மரம் நடவு செய்யப்பட்டு வருகிறது.அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு மூலம் மேலும் கூடுதல் சத்துக்கள் கிடைக்கச் செய்யும் வகையில் தருமபுரி மாவட்ட நிர்வாகம் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதாவது இரும்பு, சுண்ணாம்பு,தாமிரம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் கொண்ட முருங்கைக் கீரை மற்றும் காய்கள் பள்ளி வளாகத்திலேயே கிடைக்கும் வகையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முருங்கை மரம் நடவு செய்ய சமீபத்தில்உத்தரவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் உத்தர வின் பேரில் மாவட்ட கல்வித்துறை இந்த பணியில் 95 சதவீதத்தை நிறைவு செய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கள் வரிசையில் மொத்தம் 1661 பள்ளி கள் உள்ளன. இவற்றில் 96 ஆயிரத் துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளியில் சத்துணவு சாப்பிடு கின்றனர். அதேபோல மாவட்டம் முழுக்க 212 அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அவை அனைத்திலும் 1 லட்சத்து 4 ஆயிரத்து 964 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். அவர்களிலும் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பள்ளியில் சத்து ணவு சாப்பிடுகின்றனர். இவர்களின் உடலுக்கு சத்துணவு மூலம் கூடுதல் சத்துக்களை சேர்ப்பிக்கும் முயற்சியாகத்தான் இந்த முருங்கை மர திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘கடந்த சில வாரங்களாக அ ரசுப் பள்ளிகளில் முருங்கை மரம் நடும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 2 முருங்கை மரங்களை நடவு செய்யும்படி ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இட வசதியைப் பொறுத்து கூடுதலாகவும் முருங்கை மரங்களை நடவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும் வகை யில், ‘பள்ளிக்கு ஒரு முருங்கை நட்டு, நிறைவான இரும்புச் சத்து பெறுவோம்’ என்ற வாசகமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முருங்கைக் கீரை, பூ, காய் ஆகியவை பள்ளி வளாகத்திலேயே சத்துணவில் சேர்க்க கிடைத்து விடும். இதுதவிர பப்பாளி, வல்லாரை கீரை ஆகியவற்றை நடவும் ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். இவை அனைத் துமே குழந்தைகளின் ஆரோக்கி யத்தையும், அறிவாற்றலையும் மேம்படுத்தும் குணம் கொண் டவை. வளரிளம் பருவ மாணவிகளுக்குத் தேவையான சில முக்கிய சத்துக்களும் இவற்றில் அடங்கியுள்ளன.

இந்த உணவு வகைகள் தொடர்ந்து கிடைப்பதன் மூலம் அரசுப்பள்ளி குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்பட்டு அவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதுடன், நுண்ணறிவுத் திறன் கொண்டவர்களாகவும் உருவெடுப்பர்’ என்றனர். சிக்குர்மேனி கீரை பயிரிட திட்டம் ‘சிக்குர்மேனி’ என்பது அடர்வனப் பகுதிகளில் கிடைக்கக் கூடிய ஒரு கீரை வகை. பல கீரைகளில் அடங்கியிருக்கும் சத்துக்கள் இந்த ஒரே கீரையில் கிடைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே இந்த கீரையை உணவுக்காக அரசுப் பள்ளிகளில் நடவு செய்யவும் ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

ஆங்கில மொழித்திறன் தேர்வு: சென்னை மாணவர்கள் இருவர் சாதனை


அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடு களில் வெளிநாட்டு மாணவர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டுமா னால் ‘டோஃபல்’ எனப்படும் ஆங்கில மொழித் திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஆங்கிலத் தில் பேசுதல், எழுதுதல், வாசித்தல், கவனித்தல் ஆகியவற்றை சோதிக் கும் விதமாக இந்த தேர்வுஅமைந் திருக்கும். எஜுகேஷனல் டெஸ்டிங் சர்வீசஸ் (இ.டி.எஸ்.) என்ற அமைப்புஇந்த தேர்வை நடத்துகிறது. இந்தியாவில் டோஃபல் தேர்வில் சாதனை படைக் கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.2014 டோஃபல் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட் டது. இதில் சென்னையைச் சேர்ந்த அனூப், பத்மபிரியா உட்பட 10பேர் அதில் இடம்பெற்றனர்.

ஆங்கில மொழித் திறன், பள்ளி தேர்வில் பெற்ற மதிப்பெண், தலைமைப் பண்பு, இதர துறைகளில் செய்த சாதனை கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் சிறந்த மாணவர்களாக தேர்வுசெய்யப்பட்டனர். தலா 7 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 34 ஆயிரம்) வீதம் 70 ஆயிரம் டாலர் (ரூ.43.40லட்சம்) கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. அமெரிக்க துணை தூதர் பிலிப்-மின் இந்த உதவித்தொகையை வழங்கினார்.

உதவி பேராசிரியர் பணிக்கு பிப்.25-ல் நேர்காணல்


அரசு கலை-அறிவியல் கல்லூரி களில் 1,095 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், உளவியல், சமஸ்கிருதம், சமூகவியல், விஷூவல் கம்யூனிகேஷன், இந்திய கலாச்சாரம், மனித உரிமைகள் ஆகிய 6 பாடங்களுக்கான நேர்முகத்தேர்வு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது.தகுதியுள்ள விண்ணப் பதாரர்களுக்கு இதற்கான அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பப்படும். மேலும், தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இருந்தும் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

பிரார்த்தனை நேரங்களில் பள்ளிக்கூட மாணவர்கள் வலது கையை மார்பில் வைக்க வேண்டாம்: தமிழக அரசு விளக்கம்


தமிழ்நாட்டில் உள்ள சில அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனைநேரங்களில், மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் போது, வலது கையை மார்பில் வைக்க சொல்லி கட்டாயப் படுத்துகிறதா? என்று முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் ஒருவர் விளக்கம் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து பள்ளிக்கல்வி துறை கூறியிருப்பதாவது, ‘தங்கள் துறையோ, தமிழக அரசோ இத்தகைய அளவில் எந்தவித உத்தரவும், கட்டாயமும் பிறப்பிக்கவில்லை. தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் அப்படி செய்ய கட்டாயப் படுத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்று கூறியுள்ளது.

Wednesday 11 February 2015

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஷூ பெல்ட் அணியக் கூடாது: தேர்வு துறை ஆலோசனை


பிளஸ் 2 வகுப்பு தேர்வு நடைபெறும் மையங்களுக்கு மாணவ, மாணவிகள் ஷூ மற்றும் பெல்ட் அணிந்து வர தடைவிதிப்பது குறித்து தேர்வு துறை பரிசீலனை செய்து வருகிறது. பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் புதுச்சேரியில் 5,600 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சம் மாணவ, மாணவியர் இத் தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டு விடைத்தாளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் பக்கத்தில் மாணவர்கள் தங்களின் பதிவு எண்களையோ, பாடங்களையோ எழுத வேண்டியதில்லை. அனைத்தும் விடைத்தாளில் அச்சிட்டே வழங்கப்படுகிறது.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்களின் கையெழுத்தை மட்டும் முதல் பக்கத்தில் பதிவு செய்தால் போதும். 

மேலும், விடைத்தாள்கள் அனைத்தும் ஒவ்வொரு பாடத்துக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படு கிறது. கேள்வித்தாளில் இடம் பெறும் பயிற்சிக்கான படங்கள், விடைத்தாளில் இணைக்கப்பட்டே வழங்கப்பட உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு நேரத்தில் கடை பிடிக்க வேண்டியவை குறித்து விடைத்தாளின் இரண்டாம் பக்கத்தில் அச்சிடப்பட்டுள் ளது. அதன்படி மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது. தேர்வு எழுதும் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு அறையில் ஷூ மற்றும் பெல்ட் அணிந்து வருவதை தடை செய்யவும் தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. கடந்த ஆண்டு ஷூ, பெல்ட், டை அணிந்து வர அனுமதிக்கப்பட்டனர். 

ஆனால் இந்த ஆண்டு ஷூவை தேர்வு அறைக்கு வெளியில் கழற்றி வைத்து விட்டுத்தான் வர வேண்டும் என்று அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. அறிவியல், கணக்கு, வணிக கணிதம், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளில் முக்கிய விடைகள் மற்றும் வரைபடங்களை ஸ்கெட்ச் பேனா, கலர் பென்சில் ஆகியவற்றை பயன்படுத்தி போடுவது வழக்கம். 

ஆனால் இந்த ஆண்டு அவற்றுக்கும் தடை வருகிறது. விடைத்தாளில் எழுதப்படும் விடைகளின் கீழ் அடிக்கோடு இடக்கூடாது. குறிப்பாக ஸ்கெட்ச் பேனா, கலர் பென்சில் ஆகியவற்றால் அடிக்கோடு இடுவது, சிவப்பு மையால் அடிக்கோடு இடுவது ஆகியவற்றுக்கும் தடை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. விடைத்தாளில் மொத்தமாக ஒதுக்கப்பட்ட பக்கங்களுக்கு உள்ளாகவே விடைகளை எழுத வேண்டும்.

பள்ளிக்கு குழந்தையை அனுப்பினால் சோலார் விளக்கு: மலைக்கிராமத்தில் புதிய முயற்சி


   மலை கிராம மாணவர்களை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பும் பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சோலார் விளக்குகள் வழங்கப்பட்டது. கல்வி சுற்றுலா, ஒரிகாமி பயிற்சி உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
   ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதியில் அக்னிபாவி எனும் மலைக்கிராமத்தில் ஊராளி எனும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

    வனப்பொருட்களை சேகரித்து விற்பதும், விவசாய கூலி வேலைக்கு செல்வதும் இவர்களது வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இக்கிராமத்தில் உள்ளோர் வருடத்தின் பாதி நாட்கள் கரும்புவெட்டுதல், மூங்கில் வெட்டுதல், செங்கல் சூளைகளில் பணிபுரிதல், கட்டிட வேலை ஆகியவற்றிற்கு சத்தியமங்கலம், ஈரோடு, கோபி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விடுகின்றனர். இவ்வாறு வேலைக்கு செல்லும்போது தங்கள் குழந்தைகளையும் அவர்கள் அழைத்து சென்று வந்தனர். இதனால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதோடு, அவர்கள் குழந்தை தொழிலாளர்களாகவும் மாற்றப்பட்டு வந்தனர்.இதனை தடுக்கும் வகையில், மத்திய அரசின் தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலமாக தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளி இப்பகுதியில்நிறுவப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் சுடர் தொண்டு நிறுவனத்தினர் இந்த பள்ளியை நடத்தி வருகின்றனர்.

    கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் இப்பள்ளியில் தற்போது 35 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இவர்களின் பெற்றோர் எந்த ஊருக்கு வேலைக்கு சென்றாலும், குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து கல்வி கற்று வருகின்றனர்.இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசுப்பள்ளியில் உள்ள பாடதிட்டத்துடன், கூடை பின்னுதல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. மேலும், தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, இவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு துவங்கப்பட்டு மாதந்தோறும் ரூ.150ஐ மத்திய அரசு வழங்குகிறது.அரசின் இத்தகைய சலுகைகளுப் பிறகும் அவ்வப்போது இம்மாணவர்கள் கரும்புவெட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு செல்வதால் அவர்களின் கல்வி அவ்வப்போது தடைபட்டு வருகிறது.

    இதையடுத்து, ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கொடையாளர்களின் உதவியுடன் ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லுதல், ஒரிகாமி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளித்தல், இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுக்கள், ஆவணப்படங்கள் திரையிடல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை பள்ளியை நடத்தும் சுடர் நிறுவனம் செய்து வருகிறது.இக்கிராமத்தில் உள்ளோர் குடிசைகளில் தான் வசித்துவருகின்றனர். இவர்களின் வீடுகளுக்கு மின்வசதி இல்லாததால், மாணவர்களை தொடந்து பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இக்குடும்பங்களுக்கு சோலார் விளக்கு அளித்திட முடிவு செய்யப்பட்டது.

   சென்னையில் உள்ள கொடையாளர்களின் உதவியுடன் அக்னிபாவி கிராமத்தில் உள்ள தேசிய குழந்தைத்தொழிலாளர் சிறப்பு பள்ளிக்கு தொடர்ந்து குழந்தைகளை அனுப்பும் 20 பெற்றோர்களுக்கு சோலார் விளக்குகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சென்னை ட்ரீம் அலைவ் சங்கராமகாலிங்கம், களம் புதிது காந்தி, ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் செயலாளர் எஸ்.சிவானந்தன், சுடர் தொண்டு நிறுவன இயக்குனர் செ.சி.நடராஜ், பள்ளி ஆசிரியர்கள் சுரேஷ், இளங்கோ, தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடைத்தாளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவிப்பு.

 

     பொதுத்தேர்விற்கான விடைத்தாளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கல்வித்துறை அறிவித்துள்ளது.நடப்பு கல்வியாண்டின், பிளஸ் 2 பொதுத்தேர்விற்கான விடைத்தாள் தயார் செய்யும் பணிகள் தற்போது அனைத்து பள்ளிகளிலும், நடக்கிறது.
    இப்பணிகளில் கடந்தாண்டில் பின்பற்றிய வழிமுறைகளில், மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, விடைத்தாள்களை விரைவில் தயார்செய்யும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடங்கள், உயிரியல், கணக்கு பதிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கு மட்டுமே, பாடப்பிரிவின் பெயர் அச்சிடப்பட்ட முதன்மை விடைத்தாள் வழங்கப்படும். இதர, பாடப்பிரிவு முதன்மை விடைத்தாள்கள் அனைத்திற்கும் HSE என்ற வகை முதன்மை விடைத்தாளை பயன்படுத்த வேண்டும்.வரலாறு பாட விடைத்தாளில், 36 மற்றும் 37 பக்கத்தில் வரைப்படங்கள் வைத்து தைத்தல், வணிகக்கணித பாடத்திற்கு 36, 37 ம் பக்கத்தில், கிராப் ஷீட் வைத்துதைக்கப்பட வேண்டும்.

    மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான விடைத்தாளில், 22 பக்கங்களில் முதல் இரண்டு பக்கங்கள் கோடிடப்படாத பக்கங்களாக உள்ளன. கோடிடப்படாத பக்கங்கள் கொண்ட விடைத்தாள், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்விற்கு பயன்படுத்த வேண்டும்.இத்தேர்வின்போது, விளம்பர வினா - விடை பகுதிக்கு, அந்த கோடிடப்படாத பக்கங்களை பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள ஆங்கிலம் முதல் தாள் மற்றும் தமிழ் மொழிப்பாட தேர்வின் போது அப்பக்கங்களை பயன்படுத்தக்கூடாது. குறிப்பிட்ட பாடத்தேர்விற்கென நிர்ணயிக்கப்பட்ட வகையைச் சார்ந்த, முதன்மை விடைத்தாளுடன் மட்டுமே அப்பாடத்திற்கான முகப்புத்தாள் வைத்து தைத்தல் அவசியம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

போட்டி தேர்வு: சிறப்பு ஆசிரியர்கள் அதிர்ச்சி


    அரசு பள்ளிகளில் இசை, ஓவியம், விளையாட்டு, தையல், உடற்கல்வி ஆகியபாடப் பிரிவுகளுக்கு, ஆசிரியர் பற்றாக்குறை நிலவியதால், 2011ல், 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
      மாதம், 5,000 ரூபாய் மதிப்பூதியத்தில், வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம் மாதத்தில், 12 அரை நாட்கள் பணிநாட்களாக வரையறுக்கப்பட்டன.எதிர்காலத்தில் முழுநேர பணி வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணியாற்றி வருகின்றனர்.

    அந்த பணியிடங்களில், போட்டித்தேர்வு மூலம் நியமனம் நடக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், மதிப்பூதியத்தில் பணி செய்யும் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள், 530, ஓவிய ஆசிரியர், 250, தையல் ஆசிரியர், 160, இசை ஆசிரியர், 55 என, 995 சிறப்பாசிரியர் பணியிடங்கள் உள்ளன. போட்டித்தேர்வு மூலம் பணியிடத்தை நிரப்பினால், தங்கள் வாய்ப்பு பறிபோகும் என, பகுதிநேர ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

    தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசு கவின் கல்லூரியில், ஐந்தாண்டு பட்டம் பெற்ற பட்டதாரிகள் மட்டுமே, போட்டி தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதால், சிறப்பாசிரியர் பணியிடம் பறிபோகும் நிலை, பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ,'' என, கூறியுள்ளார்.

அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், முதியோர் ஓய்வூதியம் பெறவும் ஆதார் கட்டாயம்


    "மத்திய அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், முதியோர் ஓய்வூதியம் பெறவும், ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்,' என்ற உத்தரவால், பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
   மத்திய, மாநில அரசு திட்டங்களில், பெரும்பாலும் வங்கி கணக்கு வாயிலாகவே பண பரிவர்த்தனை நடக்கிறது. தேசிய அடையாள எண்ணுள்ள ஆதார் அட்டை இன்னும் அனைவருக்கும் வழங்கப்படவில்லை.

    மாவட்ட அளவில் 69 சதவீதம் பேர் ஆதார் பதிவுசெய்திருந்தும், அவர்களில் 50 சதவீதம் பேருக்கு கூட, இன்னும் கிடைக்கவில்லை. மூன்றாம் கட்டமாக, விடுபட்டோருக்கு ஆதார் பதியும் பணி நடந்து வருகிறது.இருப்பினும், காஸ் சிலிண்டர் மானியம் பெறுவதற்கு, வங்கி கணக்குடன் ஆதார் எண் விவரத்தை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள், வங்கி கணக்கை மட்டுமே பதிவு செய்துவிட்டு, அடுத்த கட்டமாக ஆதார் எண் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு திட்டங்களில் பயனடைய வேண்டுமெனில், ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும் என புதிய உத்தரவு வெளியாகியுள்ளது. சமூகநல திட்டத்தில், முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவி திட்டம், விதவை மறுமணம், ராமாமிர்தம் நினைவு திருமண உதவி திட்டம், மணியம்மை விதவை மகள் திருமணம், அன்னை தெரசா ஆதரவற்ற மகளிர் திருமணம் ஆகிய திட்டங்களில் விண்ணப்பிக்க, ஆதார் எண் கட்டாயம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    திருமணத்துக்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்; தவிர்க்க முடியாதபட்சத்தில், திருமணத்துக்கு ஒருநாள் முன் விண்ணப்பிக்கலாம். கலப்பு திருமணம் செய்தவர்கள், அடுத்த 2 ஆண்டுக்குள்; மறுமணம் செய்த விதவைகள், 6 மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது, வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.சமூக பாதுகாப்பு திட்டத்தில் வழங்கப்படும் முதியோர், விதவை ஓய்வூதியம் திட்ட பயனாளிகளும், அடுத்த மாத இறுதிக்குள் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்களில் ஆதார் எண் பெற்று, அங்குள்ள சமூக பாதுகாப்பு திட்ட பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலகங்களில் இருந்து, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு நல உதவி பெற ஆதார் எண் கட்டாயம் என்ற உத்தரவு, பயனாளிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அடையாள அட்டை பதிவு முடியும் வரை, ஆதார் எண் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும், என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ரசீது இல்லாவிட்டாலும்...:

   ஆதார் அட்டைக்கு உடற்கூறு பதியும் பணி நடந்து வருகிறது. முதலிபாளையம், இடுவாய், மங்கலம், பெருமாநல்லூர் போன்ற ஊராட்சிகளில், பெரும்பாலானவர்களுக்கு ரசீது கொடுக்கப்படவில்லை. "பிரின்டர்' பழுதானதால், பின்னர் வழங்கப்படும் என திருப்பி அனுப்புகின்றனர்.உடற்கூறு பதிவு செய்தவர்களில் பலருக்கு இன்னும் ஆதார் அட்டை கிடைக்கவில்லை. அதில், ரசீது வைத்துள்ளவர்கள், "ஆன்லைன்' மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ரசீதும் பெறாததால், என்ன செய்வதென தெரியாமல், பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஆதார் பதிவு அலுவலர்கள் கூறியதாவது:

    ரசீது பெற்று தொலைத்தவர்கள், இதுவரை ரசீது பெறாதவர்களுக்கு, இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வெளியாகும். அதன்பின் நேரில் வந்து, பெயர் மற்றும் மொபைல் எண் தெரிவித்து, தங்களின் ரசீது எண் மற்றும் ஆதார் எண் பெற்றுக்கொள்ளலாம். அந்த எண்ணை பயன்படுத்தி, "ஆன்லைன்' மூலம் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.உடற்கூறு பதிவு செய்தும், ஆதார் அட்டை கிடைக்காமல் இருப்பவர்கள் கவலைப்பட தேவையில்லை. தற்போதும் கூட, கம்ப்யூட்டர் சென்டர்களுக்குச் சென்று, தங்களது பெயர், மொபைல் எண் தெரிவித்துஆதார் எண்ணை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பள்​ளி​க​ளில் கூடுதல் தமிழாசிரியர்கள் நியமிக்க கோரிக்கை


     அர​சுப்​பள்​ளி​க​ளில் தமிழ் மொழிப்​பா​டத்தை,​​ முதல் பாட​மாக கொண்டு வந்து பள்​ளி​க​ளில் கூடு​தல் தமி​ழா​சி​ரி​யர்​கள் நிய​மிக்க அரசு நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என தமி​ழா​சி​ரி​யர்​கள் மற்​றும் தமிழ் ஆர்​வ​லர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ள​னர்.​ ​ ​​
       தமி​ழ​கத்​தில் உள்ள அர​சுப் பள்​ளி​க​ளில் ஒரு பள்​ளி​யில் 150 மாண​வர்​கள் படித்​தால் ஐந்து ஆசி​ரி​யர்​கள் நிய​ம​னம் செய்​ய​லாம் என்ற அரசு உத்​த​ரவு உள்​ளது.​அதே​போல் கூடு​த​லாக 30 மாண​வர்​கள் இருந்​தால் ஒரு ஆசி​ரி​யர் நிய​ம​னம்செய்து கொள்​ள​லாம்.​ கடந்த 2012க்கு முன்​னர் வரை பள்​ளி​க​ளில் தமிழ்மொழிப்​பா​டம்,​​ கால அட்​ட​வணை மற்​றும் வகுப்​ப​றை​யில் முதல் பாட​மாக இருந்​தது.​ இத​னால் கூடு​தல் மாண​வர்​கள் பள்​ளி​க​ளில் சேரும்​போது முத​லில் தமிழ் மொழிப்​பாட ஆசி​ரி​யர்​க​ளுக்கு முக்​கி​யத்​து​வம் வழங்​கப்​பட்​டது.​

    அதன்கார​ண​மாக,​​ தமி​ழக அரசு நடத்​தும் போட்​டித் தேர்​வு​க​ளில்​(டிஎன்​பி​எஸ்சி)​ தமிழ் மொழிப்​பா​டத்தி​லி​ருந்து அதி​க​மான வினாக்​கள் கேட்​கப்​ப​டு​வ​தால் அதற்கு முக்​கி​யத்​து​வம் வழங்கி தமி​ழா​சி​யர்​கள்,​​ மாண​வர்​களை தயார் படுத்தி வரு​கின்​ற​னர்.​ ​ இந்​நி​லை​யில் 2012 ஜூலை 6 இல்,​​ பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் 266-இல் புதிய அர​சாணை பிறப்​பிக்​கப்​பட்​டது.​ அதில்,​​ கணி​தம்,​​ அறி​வி​யல்,​​ சமூக அறி​வி​யல்,​​ ஆங்​கி​லம்,​​ தமிழ் என பாடங்​கள் வரை​யறை படுத்​தப்​பட்​டுள்​ளன.​இதன் கார​ண​மாக பள்​ளி​க​ளில் கூடு​தல் மாண​வர்​கள் சேர்​கின்ற போது முத​லில் கணி​தம்,​​ அடுத்து அறி​வி​யல் என அரசு வரி​சைப் படுத்​தி​யுள்​ள​ப​டியேஆசி​ரி​யர்​கள் நிய​ம​னம் செய்ய முடி​கி​றது.​ கடைசி நிலை​யில் தமிழ் மொழிப்​பா​டம் உள்​ள​தால் பள்​ளி​க​ளில் 300 மாண​வர்​கள் இருந்​தால் மட்​டுமே கூடு​த​லாக ஒரு தமி​ழா​சி​ரி​யர் நிய​மிக்க முடி​யும்.​உதா​ர​ண​மாக ஒரு அர​சுப் பள்​ளி​யில் 280 மாண​வர்​கள் படித்​தால் அங்கு ஒரு தமி​ழா​சி​ரி​யர் மட்​டுமே பணி​பு​ரி​யும் இக்​கட்​டான நிலை உள்​ளது.​ இதன் கார​ண​மாக தமிழ் மொழிப் பாடத்தை கற்​பிப்​ப​தி​லும்,​​ மாண​வர்​களை போட்​டித் தேர்​வு​க​ளுக்கு தயார் படுத்​து​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது.​ எனவே தமிழ் மொழிப் பாடத்தை,​​ முதல் பாட​மாக வைக்க அரசு உத்​த​ர​விட வேண்​டும் என தமிழ் ஆர்​வ​லர்​கள் கோரிக்கை வைத்​துள்​ள​னர்.​​ ​

        தமி​ழக தமி​ழா​சி​ரி​யர் கழ​கத்​தின் மாநில பொதுச் செய​லர் நீ.இளங்கோ கூறி​யது:​ ​ அனைத்து மாநி​லங்​க​ளி​லும் அவர்​க​ளது தாய்​மொ​ழியே பள்​ளி​க​ளில் முதல் மொழிப் பாட​மாக வைத்​துள்​ள​னர்.​ அதே​போல் தமி​ழ​கத்​தில் தமிழ்மொழியை ​ முதல் பாட​மாக கொண்டு வர அரசு நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​ பள்​ளிக் கல்​வித்​துறை சார்​பில் வெளி​யி​டப்​பட்​டுள்ள புதிய அர​சா​ணையை ரத்துசெய்ய வேண்​டும் என்​றார்.

Tuesday 10 February 2015

ஒருங்கிணைந்த படிப்புகளுக்கு இந்தியாவில் அதிகரிக்கும் வரவேற்பு!.


           Integrated courses எனப்படும் ஒருங்கிணைந்த படிப்புகளின் எண்ணிக்கையும், அப்படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும், இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

                இதுகுறித்து கூறப்படுவதாவது: தற்போதுவரை, பல இந்தியப் பல்கலைக்கழகங்கள், ஒருங்கிணைந்த படிப்புகளைத் தொடங்கியுள்ளன. அவை, பொறியியல் துறையில், combo படிப்புகளை மட்டும் வழங்கவில்லை. மாறாக, மெடிக்கல் நானோடெக்னாலஜி, கணிதம் மற்றும் டேட்டா-மேனேஜ்மென்ட் ஆகிய துறைகளிலும் ஒருங்கிணைந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போதைய தொழில்துறை தேவைகளுக்கேற்ற வகையில், அப்படிப்புகள் இன்னும் சிறப்பான வகையில் ஒருங்கிணைக்கப்பட்டால், எதிர்காலத்தில், மாணவர்கள், அதிகளவில் அப்படிப்புகளின்பால் ஈர்க்கப்படுவார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை, சாஸ்த்ரா பல்கலை, வி.ஐ.டி. பல்கலை, அம்ரிதா பல்கலை, அண்ணா பல்கலை மற்றும் இதர மாநிலப் பல்கலைக்கழகங்கள், குறிப்பிட்ட துறைகளில், ஒருங்கிணைந்த படிப்புகளை ஏற்கனவே துவக்கியுள்ளன. பல கல்வி நிறுவனங்கள், சந்தை மற்றும் தொழில்துறை தேவைகளை ஆய்வுசெய்து, அதற்கேற்ப, தங்களின் ஒருங்கிணைந்த படிப்புகளை வடிவமைக்கின்றன. இரண்டு படிப்புகளின் பாடத்திட்டங்களை ஒருங்கிணைக்கும்போது, முக்கியமான மற்றும் அடிப்படையான அம்சங்கள் எதுவும் விடுபட்டுவிடாதவாறு கவனமாக இருக்க வேண்டும். மேலும், ஒருங்கிணைக்கும்போது, பாடங்களிலுள்ள தேவையற்ற அம்சங்கள் நீக்கப்படுகின்றன மற்றும் தேவையான அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன. மாணவர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பார்க்கும்போது, கணிப்பொறி அறிவியல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய படிப்புகள் இணைந்த Integrated படிப்பிற்கு, அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. ஏனெனில், இந்த ஒருங்கிணைப்பின் மூலமாக, தொழில்துறை தேவைகள் மற்றும் நிலை குறித்து தெளிவாக அறிந்துகொள்ள முடிவதால், மாணவர்கள், இப்படிப்பை அதிகம் விரும்புகின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

           வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன, தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:

  • தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.


தேவையான ஆவணங்கள்:

  • பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
  • சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.


  • பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.


  • தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.


  • மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.




கட்டணம்

  • பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.


  • தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.


செலுத்தும் முறை:

  • அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.

  • அஞ்சல் மூலம் செலுத்த: உதவி இயக்குநர் (வெளியீடுகள்), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-600 002 என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.

  • பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.


விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:

  • பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.


  • பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.


  • பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.


  • பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.


  • விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.




நிபந்தனைகள்:

  • விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.
  • பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.
  • இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
  • வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.




எப்படி பெறுவது?

அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.



தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.



விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:

சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.



விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.



மேலும் விவரங்களுக்கு:

உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்


http://www.stationeryprinting.tn.gov.in/servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.


http://www.stationeryprinting.tn.gov.in/forms.htm விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.



தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:

சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.


சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும். இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்

மத்திய அரசின் அரசாணை வெளியீடு பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்வு ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் தகவல்


ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி அதிர்வு; நாடு முழுவதும் வெகுண்டு எழுமா?

.

    டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வரலாற்று திருப்பமாக பார்க்கப்படுகிறது. கட்சி துவக்கி ஒரு ஆண்டிற்குள் மக்கள் மத்தியில் இவ்வளவு செல்வாக்கு பெற கெஜ்ரிவாலுக்கு எந்த ஆயுதம் உதவியது. இவரது முன்னேற்றத்திற்கு என்ன காரணம் ? மக்களை எப்படி கவர்ந்தார் என அரசியல் விமர்சகர்கள் தங்களின் விவாதங்களில் அலசி வருகின்றனர்.
           இன்றைய வெற்றி மூலம் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி நாடு முழுவதும் இன்னும் அபரிதமாக இருக்குமோ என்றே எண்ண தோன்றுகிறது. இந்த கட்சி வளர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஹசாரே குழுவில் இருந்து விலகி, 2012 நவ., 26ல் "ஆம் ஆத்மி' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். டிச., 4ல் நடந்த டில்லி தேர்தலில் இவரது கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. 2013 டிச., 4ல் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 28 இடங்களில் வென்று பா.ஜ.,வுக்கு (32), அடுத்ததாக 2வது பெரிய கட்சி என்ற சாதனை படைத்தது. காங்., கட்சி ஆதரவுடன் டிச., 26ல் டில்லி முதல்வராக பொறுப்பேற்றார். 49 நாள் ஆட்சி நடத்திய கெஜ்ரிவால் சட்டசபையில் லோக்பால் மசோதவை கொண்டு வந்தார். ஆனால் இதற்கு காங்., ஆதரவு அளிக்காததால், முதல்வர் பதவியை 2014 பிப்., 14ம் தேதி ராஜினாமா செய்தார். பின் இங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2015 பிப்., 7ல் நடந்த மீண்டும் தேர்தல் நடந்தது. காங்கிரசுக்கு பூஜ்யம்: இன்றைய தேர்தல் முடிவில் காங்கிரஸ் பூஜ்யம். கடந்த முறை 31 தொகுதிகளை பிடித்த பா.ஜ.,வுக்கு இந்த முறை ஒற்றை இலக்கமான 3 தொகுதிகளே கிடைத்துள்ளது. ஆம் ஆத்மிக்கு கிடைத்த 95 சதவீத வெற்றி வரலாற்றில் பொறிக்கும் அளவிற்கு இடம் பெற்றுள்ளது. 


    ஹசாரேயிடம் அரசியல் பாடம் பயின்றவர் ; ஐ.ஆர்.எஸ்., படித்த ஒரு அதிகாரியாக இருந்து,அரசியலுக்கு வந்து ஏழை மக்களை மட்டுமே அரவணைத்தார் கெஜ்ரிவால். அன்னா ஹசாரேயிடம் அரசியல் பாடம் பயின்றார். அவரது ஆரம்ப அரசியலில், பொது விஷயங்களை முன்வைத்தே போராட்டம் நடத்தி வந்தார். தொகுதிகளின் அடிப்படை தேவைகள் குறித்த அக்கறை, ஜன்லோக்பால், ஊழல் ஒழிப்பு, சமூக நோக்கிலான திட்டம் என்பது இவரது குறிக்கோளாக இருந்தது. இதுவே இவரது அளப்பரிய வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. 

ஆம் ஆத்மி ஒரு எச்சரிக்கை மணி : மேலும் டில்லி தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக 3 மாதங்களாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார். இவரது பிரசாரத்தில் வேறு எந்தவொரு பிரச்னையும் தொடாமல் அடிப்படை தேவைகள் குறித்தே இவரது பிரசாரம் இருந்தது. இதுவே இவரது வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது. 


இன்றைய தேர்தல் வெற்றி மூலம் நாடு முழுவதும் அந்த அதிர்வு பரவி , இது போல் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற அலை தற்போது எழுந்திருக்கிறது. மாநில வாரியாக ஊழல் செய்தவர்களே, ஆட்சி கட்டிலை பரபரம்பரை, பரம்பரையாக சொந்தம் கொண்டாடி வருபவர்களுக்கு ஆம் ஆத்மி ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளது என்றே கூறலாம். கெஜ்ரிவால் தலைநகரில் ஆட்சியை பிடித்து இருப்பதால், பிற மாநில அரசியல் கட்சிகளும் இவரது ஆதரவு, தயவை நாடி நிற்கும். இதன் மூலம் அரசியல் உறவுகளை புதுப்பித்து கொள்ளும். இதனால் உதிரி கட்சிகள் பல ஆம் ஆத்மியில் கூட்டு சேர தனது ஆதரவு கரத்தை நீட்டும். படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு ஏற்ற சூழலை ஆம் ஆத்மி உருவாக்கியுள்ளது. 


தமிழகத்தில் ஊழலில் திளைத்த கட்சிகள்: தமிழகத்திலும் கடந்த 40 ஆண்டு காலமாக ஊழலில் ஊறிப்போனவர்களே ஆட்சி கட்டிலில் இருந்து வந்துள்ளனர். சோடா விற்றவன் முதல் தெருவோரம் வேலை இல்லாமல் திரிந்தவர்கள் எல்லாம் அரசியலில் பல்வேறு பொறுப்புகளில் அமர்ந்து கொண்டு சுமோ கார்களில் வலம் வருவதை பார்க்க முடிகிறது. பலரும் கோடிகளில் புரள்கின்றனர். இவ்வாறு இருக்கும் போது படித்த இளைஞர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்ற கேள்வி கெஜ்ரிவால் வெற்றி மூலம் எழுகிறது. இந்த விழிப்புணர்வு அதிகரிக்கும் போது அரசியல் இன்னும் தூய்மை அடைய வாய்ப்பு இருக்கிறது. சரியான தலைமை, நேர்மையான பார்வைகள் என்பது புதிய இளைஞர்கள் அரசியலுக்கு உயிர்மூச்சாக இருக்க வேண்டும் என்பதே அவா.