தனித்தமிழ் வளர்ப்போம்


Thursday, 12 March 2015

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

         மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் யு.ஜி.சி.விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
       இதையடுத்து கல்யாணி மதிவாணன் நியமனத்துக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை தடை விதித்தது. தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.இன்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்தசுப்ரீம் கோர்ட்டு, 2010–ம் ஆண்டு யு.ஜி.சி. கொண்டு வந்த விதிமுறைகள் சட்டம் ஆகவில்லை. எனவே, கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லும் என்று கூறி மதுரை ஐகோர்ட்டு கிளை பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்தது. அவர் தொடர்ந்து துணை வேந்தராக நீடிக்கலாம் என்று தீர்ப்பு கூறியது.

No comments:

Post a Comment