சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று
வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வில் மாணவிகள் அதிகளவாக, 94.4 சதவீதம் பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவிகளில்
4,19,794 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.9
சதவீதம். தேர்வு எழுதிய மாணவர்களில் 3,41,931 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒரே பள்ளியில் இரண்டு ‘ரேங்க்’: கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி ஆர்த்தி, அதே பள்ளியை
சேர்ந்த ஜஸ்வந்த் ஆகியோர் தலா 1195 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில்
முதலிடம் பிடித்துள்ளனர்.
ஆர்த்தி 1200க்கு 1195 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் தமிழில் 199,
ஆங்கிலத்தில் 197, கணிதத்தில் 200, இயற்பியலில் 199, வேதியியல் மற்றும்
உயிரியல் பாடத்தில் தலா 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment